Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label வயிற்றுக் கோளாறு. Show all posts
Showing posts with label வயிற்றுக் கோளாறு. Show all posts

Wednesday, December 11, 2013

வயிற்றுக் கோளாறிலிருந்து விடுதலை பெற



வயிறு உப்பலாக இருக்கிறது என்று, நன்றாக "கண்டதையும்" சாப்பிட்டவர்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள். "கண் மண் தெரியாமல் சாப்பிட்டால் இப்படித் தான் நேரும்" என்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவர்.

வயிற்றுக்கு வேண்டிய அளவு தான் சாப்பிட வேண்டும்; காய்கறி, "பழங்கள் சாப்பிடுகிறேன்" என்று அதையே மிக அதிகமாக சாப்பிட்டாலும், நார்ச்சத்து அதிகமாகி, வயிறு உப்பிவிடும். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் இப்படி ஏற்படும். அடிக்கடி இப்படி ஏற்பட்டால், டாக்டரிடம் காட்டுவது முக்கியம். குடலில் தங்கக்கூடாது! சாப்பிடும் எந்த உணவும், அதிக பட்சம் ஐந்து மணி நேரத்தில் செரிமானம் ஆகி விடும். இதையடுத்து, அடிவயிற்றில் உள்ள தசைகளும், குடல் தசைகளும் இயங்கி, மலத்தை வெளியேற்றுகின்றன.