Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, March 1, 2014

மூடாக்கு மந்திரம்… முத்தான லாபம்!



ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள்… என காசை இறைத்து விவசாயம் செய்து, கண்ணீரை அறுவடை செய்வது ஒரு ரகம். கழிவுகளை இறைத்து, இயற்கை விவசாயம் செய்து காசை அறுவடை செய்வது இரண்டாவது ரகம்! இதில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர் – விசாகுமார். தீவிரமாக இயற்கை விவசாயம் செய்து வரும் இவர், தென்னைக்கு ஊடுபயிராக பல ரக வாழைகளையும் சாகுபடி செய்துவருகிறார்.

சுற்றுச்சுவரில் கீரை.. உரி பைகளில் காய்கறி…மாடிவீட்டு உழவர்…!


விவசாயம் செய்ய நினைத்தால், ஏக்கர் கணக்கிலான நிலம் தேவையில்லை. ஆர்வமும், அர்ப்பணிப்பும் இருந்தால் மட்டும் போதும். வீட்டு காம்பவுண்ட் சுவற்றில் கூட விவசாயம் செய்யலாம் என்கிறார் கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் பால்ராஜ்.

Friday, February 28, 2014

புங்க மரம்


இயற்கையின் அருட்கொடைகள் தான் மரங்கள், செடி, கொடிகள். இவை ஒவ்வொன்றுமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. மேலும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படும் பிராண வாயு அதாவது ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் மரங்கள். மழையை வருவிக்கும் வருணபகவானாக மரங்களும், செடிகளும் உள்ளன.

குர்ஆனில் மலைப்பூட்டும் சான்றுகள்.


தொகுப்பு: குலசை சுல்தான்
குர்ஆனில் பேசும் எறும்புகள்!
நபி சுலைமானிடம் பேசிய எறும்பு27:16-19(نملة سليمان)

حَتَّى إِذَا أَتَوْا عَلَى وَادِي النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ

இறுதியாக அவர்கள் (எறும்புகள் நிறைந்த) எறும்புப் புற்றின் அருகே வந்தபோது, ‘எறும்புகளே! உங்கள் குடியிருப்புக்களுக்குள் நுழையுங்கள்! சுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக்கூடாது என்று ஓரு எறும்பு கூறியது. (அல்குர்ஆன்:27:18)

குர்ஆனில் விஞ்ஞானம்...பெருவெடிப்பு கொள்கை

தொகுப்பு. குலசை சுல்தான்
பெருவெடிப்பு கொள்கை
20,
நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? அல்குர்ஆன் 21:30

வீட்டு மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்கும் திட்டத்துக்கு அமோக வரவேற்பு

நீங்களே செய்து பாருங்கள்!

வீட்டு மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்கும் திட்டத்துக்கு சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 2 மாதத்தில் விண்ணப்பித்த 8 ஆயிரம் பேரில் இரண்டாயிரம் பேருக்கு காய்கறித் தோட்ட இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

Thursday, February 27, 2014

இதய மாற்று சிகிச்சைக்குக் காத்திருப்பவர்களுக்கு செயற்கை இதயம்





உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் செயற்கை உறுப்புகளைப் பொருத்தும் முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவற்றின் உச்சகட்ட வளர்ச்சியாக, இதயம் செயலிழந்து, இதய மாற்று சிகிச்சைக்குக் காத்திருப்பவர்களுக்கு மாற்று இதயம் கிடைக்கும் வரை உயிரைப் 'பிடித்து' வைக்க செயற்கை இதயத்தைப் பொருத்தும் அறுவை சிகிச்சையும் தற்போது பிரசித்தமாகி வருகிறது.

ஆண்களை அதிகம் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் வழிகள்!!!


ஏறத்தாழ 6-ல் ஒருவருக்கு புரோஸ்டேட் புற்றுநோயால் தாக்கப்பட்டுள்ளதாகவும், 2012 ஆம் ஆண்டில் மட்டும் 2,41,000 ஆண்களுக்கு இந்த நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. புரோஸ்டேட் புற்றுநோய் வயதான ஆண்களுக்கு வரும் நோயாக கருதப்படுகிறது. ஆனால் தற்போது குறைந்த வயதுள்ள ஆண்களுக்கும் குறிப்பாக அமெரிக்கர்களிடம் அதிகமாக காணப்படும் நோயாக இது உள்ளது.

Tuesday, February 25, 2014

முட்டையின் மஞ்சள் கருவை சுலபமாக பிரித்தெடுப்பது எப்படி ?


Egg 11
பல நேரங்களில் மருத்துவ அல்லது அழகுக்கலைக்காக  முட்டையின் மஞ்சள் அல்லது வெள்ளை கருவை பிரித்தெடுக்க வேண்டியது இருக்கும். அப்படி பிரித்து எடுப்பது மிக சிரமமான காரியமாக இருப்பதை நாம் அறிவோம். அதற்கு சுலபமாக ஒரு வழியை இங்கு காண்போம் !

குர்ஆனில் தேனீயின் (النَّحْل) அதிசயம்!

குர்ஆனில் மலைப்பூட்டும் சான்றுகள்

தொகுப்பு: குலசை சுல்தான்

தேனி (النَّحْل)

அருள்மறைக்குர்ஆனில் அல்லாஹ், ”தேனீக்களைச் சிந்திக்கும் மக்களுக்கு அத்தாட்சி உள்ளது” எனக்கூறுகிறான். 16:68,69

கரு உருவாகுதல் மற்றும் கரு வளர்ச்சி

குர்ஆனில் விஞ்ஞானம்!
தொகுப்பு. குலசை சுல்தான்

மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்-) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்- பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம் உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்- பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்-

பாட்டி வைத்தியம்-2


பல்லில் புழுக்கள் ! சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.

உடல் பருமன் குறைய! வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

வான்மறையில் விந்தைக் கண்கள்!

குர்ஆனில் மலைப்பூட்டும் சான்றுகள்
தொகுப்பு: குலசை சுல்தான்

வைரங்கள் போல் மின்னிடும் அதிசயங்கள் பலவற்றை வான்மறை நெடுகிலும் காண முடிகிறது. கண்டும் காணாமல். கண்டதை ஆராயாமல் அலட்சியப்படுத்தும் மனிதனின் அவல நிலையை கண்டு, எப்படித்தான் அவனால அலட்சியப்படுத்த முடிகிறது? என அல்லாஹ்வே தன் அருள் மறையில் வியப்போடு குறிப்பிடுகிறான்.

‘நமது அத்தாட்சிகளை கண்டும் (காணாமல்) அவர்கள்அலட்சியப்படுத்திச செல்கின்றனர். (அல்-குர்ஆன் 54:2) எனவே, நாம் படிப்பினை பெறவும்,நமது நமடபிக்கையை வலுப்படுத்தவும் நாம் குர்ஆனில் பளிச்சிடும் அதிசயங்களை தொடர்ந்து காண்போம்.

பாட்டி வைத்தியம்-1


எலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.
ஆடு தீண்டாப் பாளையை, தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் மறையும்.

100 ஆண்டுகளை நிறைவு செய்த பாம்பன் ரயில் பாலம்!



ராமேசுவரம்-பாம்பன் பகுதியை இணைக்கும் வகையில் கடலில் அமைந்துள்ள மிக நீளமான ரயில் பாலம் திங்கள்கிழமையுடன் (பிப். 24) நூறு ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடாவை இணைக்கும் பகுதி பாம்பன் கடலாகும்.

வெற்றிலை போடுதல் !


ஆதி காலத்திலிருந்தே தாம்பூலம் தரித்தல் என்கிற வெற்றிலை போடும் பழக்கம் இருந்து வருகிறது.

போடும் முறை:

* வெற்றிலையை முதலில் முன்புறமும் பின்புறமும் நன்கு துடைக்கவும். பின்புறம் அளவாகச் சுண்ணாம்பு தடவவும்.

* காம்பு, நடுநரம்பு, நுனி ஆகியவற்றை நீக்கவும்; பாக்குடன் மெல்லவும்.

இப்படி ஒரு சாப்பாடு யாருக்கு வேணும் !


சுறா மீன் சிப்ஸ்..


உருளைகிழங்கு--4
*ஆலிவ் ஆயில்-2
*உப்பு
*மிளகு பொடி
*500கிராம் சுறா மீன்
*எண்ணெய்

கேரட் - பனீர் ரைஸ்..


என்னென்ன தேவை? 

கேரட் - 2 (துருவியது), 
பனீர் - 50 கிராம், 
பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிது,
நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன்,