Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label 1000ம் வது பதிவு. Show all posts
Showing posts with label 1000ம் வது பதிவு. Show all posts

Monday, December 30, 2013

உற்சாக வருமானம் தரும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்!

எமது 1000ம் வது பதிவு இங்கே!!
நெல், தென்னை, ஆடு, கோழி, புறா, முயல், வாத்து... 8 ஏக்கர்... 13 லட்சம்...
உற்சாக வருமானம் தரும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்!
புல், பூண்டு, செடிகள், கொடிகள், மரங்கள், புழுக்கள், பூச்சிகள், விலங்குகள்... எனப் பல்லுயிர்கள் அடங்கியதுதான் கானகம். இவையெல்லாம் இல்லாமல், வெறும் மரங்கள் மட்டுமே இருந்தால்... அது கானகமாக இருக்க முடியாது. அதேபோலத்தான் விவசாயமும்... ஒரே பயிர் வெள்ளாமை மட்டுமல்ல விவசாயம். பலவிதமானப் பயிர்கள் கால்நடைகள், மீன்கள்... என அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒன்றின் கழிவை மற்றொன்றுக்கு உணவாகக் கொடுத்து, குறைந்த செலவில் அதிக லாபம் பார்ப்பதுதான் நமது பாரம்பரிய விவசாயம். இத்தகைய 'ஒருங்கிணைந்தப் பண்ணையம்’தான்... விவசாயிகளை என்றென்றைக்கும் வாழவைக்கும்''