Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label செம்மொழி. Show all posts
Showing posts with label செம்மொழி. Show all posts

Sunday, January 5, 2014

செம்மொழி - கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதை


ஒலிக்கடலில் முதன் முதலாய் 
உதித்து வந்த பேரலையே 
கலைக்கடலை நாவினால் 
கடையவந்த செவியமுதே ! 
பிறந்தநாள் அறியாத 
பேரழகே! பிறமொழிகள் 
இறந்தநாள் காண நிதம்
இளமை பெற்று வந்தவளே
நயந்த மொழிகளிங்கு
நாலாயிரமிருந்தும்
உயர்ந்தவளே! உன்னைப்போல்
உயிமெய்யோடிருப்பவர் யார்?

Saturday, November 30, 2013

சிலையாகிவிட்டதா செம்மொழி?

 
அரசுப் பள்ளி ஆசிரியரும் அவருடைய எழுத்தாள நண்பரும் பேசிக் கொண்டிருந்தார்கள். மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பெற்றோர்கள் மாணவர்களை ஆவேசத்துடன் சேர்த்துவருவதுபற்றி அந்த ஆசிரியர் கவலையை வெளியிட்டார். ஏழாம் வகுப்பு ஆசிரியரான அவரிடம் எழுத்தாள நண்பர், ‘‘எங்கே நிலநடுக்கோட்டுக்கு இங்கிலீஷ்ல என்ன சொல்லு பாக்கலாம்?’’ என்று கேட்டார்.
ஆசிரியருக்குப் பதில் தெரியவில்லை. மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பது நியாயம்தான் என்பது போன்ற உணர்வுக்கு அவர் வந்ததாகத் தோன்றியது.