இந்தியா இந்துக்களுக்கு மட்டும்தான்’ என்று கருத்து தெரிவித்த கவர்னரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் அசாம் முதல்–மந்திரி போர்க்கொடி!
அசாம் கவர்னரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று மாநில முதல்–மந்திரி தருண் கோகாய் போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்.
நாகாலாந்து கவர்னராக பதவி வகித்து வரும் பி.பி.ஆச்சார்யா, கூடுதல் பொறுப்பாக அசாம் மாநிலத்தையும் கவனித்து வருகிறார்.
நேற்று முன்தினம் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய
அவர் ‘இந்துஸ்தான்(இந்தியா) இந்துக்களுக்கு மட்டும்தான்’ என்று கருத்து
தெரிவித்ததாக ஊடகங்களில் தகவல் வெளியானது.
இதனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாநில
முதல்–மந்திரியும், அசாம் மாநில காங்கிரஸ் தலைவருமான தருண்கோகாய் போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்