மதச் சடங்குப் புகையால் உருகும் இமய மலைப்பாறைகள்.
மதச் சடங்குகளின்போது வெளியேறும் கரியமில வாயு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் புவி வெப்பமடைதலுக்கு காரணமாக அமைந்துள்ளன. அதன் காரணமாக இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருகின்றன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
காற்று மாசுபடுவதற்கு இந்தியா, நேபாளம் உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் மேற்கொள்ளப்படும் மதச் சடங்குகளின்போது வெளிப்படும் புகையும் ஒரு காரணம் என்று நீண்ட நாள்களாக சூழலியலாளர்களிடையே கருத்து நிலவி வந்தது.