சரி டைம் இல்’ இந்த வார்த்தையைப் பலரும் சொல்லியிருப்போம். இந்த வார்த்தையால் உறவுகள், நண்பர்கள், அலுவலகம் எல்லோரிடத்திலும் சங்கடங்களை உருவாக்கியிருப்போம்.
நேரம், இன்றைக்கு உலகின் மிகப் பெரிய தேவை. எல்லோருக்குமே இது அவசியத்
தேவை. நேரம் ஒரு பெரிய வளம். ஆனால் பணத்தைப் போல, பொருள்களைப் போல
நேரத்தைச் சேமித்துவைக்க முடியாது.
நேரத்தைக் கையாள முடியாத நாம் நேரமின்மையைப் பற்றிப் புலம்புவதைத் தினசரி
நடவடிக்கையாகக் கொண்டிருக்கிறோம். நமக்கு அன்னியோன்யமான நபர்கள்
பேசுவதைக்கூட நம்மால் காதுகொடுத்துக் கேட்க முடியாமல் போகிறது.