வயதான மூத்தக் குடிமக்களைப் பாதுகாத்து பராமரிக்க வேண்டியது குடும்ப உறுப்பினர்களின் சட்டபூர்வ கடமையாக்கப்பட்டுள்ளது.
எனினும் போதிய சட்ட விழிப்புணர்வு இல்லாததால் பிள்ளைகளால் கைவிடப்படும்
மூத்த குடிமக்கள் பலர் சட்ட ரீதியான நிவாரணம் பெற முடியாமல்
தவிக்கிறார்கள். தள்ளாத வயதில் வீட்டை விட்டு வெளியேறி மூத்த குடிமக்கள்
காணாமல் போகும் செய்திகளும், அடைக்கலம் தேடி முதியோர் இல்ல கதவுகளைத்
தட்டும் நிகழ்வுகளும், தொலை தூரத்துக்குச் சென்று ஆதரவற்றவர்களாக
மரணமடையும் அவலங்களும் இந்த நாட்டில் நிறையவே நடக்கின்றன.