கொச்சியிலிருந்து தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக பெங்களூருவுக்கு இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்வதற்கான குழாய்களை விவசாய நிலங்களின் ஊடாகப் பதிக்க இந்திய எரிவாயு ஆணைய நிறுவனத்துக்கு ("கெயில்') அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.