தட்டச்சு இயந்திரங்களைத் தயாரிக்கும் கோத்ரெஜ் நிறுவனம் தட்டச்சு தயாரிப்பதை நிறுத்திவிட்டதாக அண்மையில் ஒரு செய்தி வந்தது.இப்போது எங்கு பார்த்தாலும் கணினிகள் வந்துவிட்டன. அதிலேயே அச்சுப் பணிகள் எல்லாம் நடக்கின்றன.பிறகு எதற்கு தட்டச்சுகள்? அதன் தேவை குறைந்து விட்டதால் தயாரிப்புகளும் நிறுத்தப்படுகின்றன. ஆனால்,இந்த தட்டச்சுகள் கடந்த இரு நூறு ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த மிக முதன்மையான இயந்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா? கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை இன்று கணினி வகுப்புகளுக்குச் செல்வதைப் போல் மாணவ, மாணவிகள் தட்டச்சுப் பயிற்சி பெறச் சென்றார்கள்.