Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Sunday, January 5, 2014

செம்மொழி - கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதை


ஒலிக்கடலில் முதன் முதலாய் 
உதித்து வந்த பேரலையே 
கலைக்கடலை நாவினால் 
கடையவந்த செவியமுதே ! 
பிறந்தநாள் அறியாத 
பேரழகே! பிறமொழிகள் 
இறந்தநாள் காண நிதம்
இளமை பெற்று வந்தவளே
நயந்த மொழிகளிங்கு
நாலாயிரமிருந்தும்
உயர்ந்தவளே! உன்னைப்போல்
உயிமெய்யோடிருப்பவர் யார்?

Sunday, December 15, 2013

கலக்கங்களுக்கும் கலகங்களுக்கும் மத்தியில்...


அரபு இலக்கியத்தில் நவீன மரபு என்பது மேற்கின் தாக்கத்தோடு உருவானது. அரபு இலக்கியத்தில் புனைவைவிடக் கவிதைதான் அதிக தூரத்தைக் கடந்தது. கி.பி. 4ஆம் நூற்றாண்டில் தொடங்கி, வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்டது அரபுக் கவிதை. அதன் செவ்வியல் மரபு பல்வேறு பரிணாமங்களைக் கடந்து, மத்தியக் கிழக்கின் இலக்கிய உலகில் பயணம் செய்து வந்திருக்கிறது. அது பல்வேறு தொடர்ச்சிகளையும், நெளிவு, சுளிவுகளையும் உட்கொண்டிருந்தது.