அரபு இலக்கியத்தில் நவீன மரபு என்பது மேற்கின் தாக்கத்தோடு உருவானது. அரபு இலக்கியத்தில் புனைவைவிடக் கவிதைதான் அதிக தூரத்தைக் கடந்தது. கி.பி. 4ஆம் நூற்றாண்டில் தொடங்கி, வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்டது அரபுக் கவிதை. அதன் செவ்வியல் மரபு பல்வேறு பரிணாமங்களைக் கடந்து, மத்தியக் கிழக்கின் இலக்கிய உலகில் பயணம் செய்து வந்திருக்கிறது. அது பல்வேறு தொடர்ச்சிகளையும், நெளிவு, சுளிவுகளையும் உட்கொண்டிருந்தது.