வெகுமதி கொடுக்கும் வேம்பு !
ஜி. பழனிச்சாமி,படங்கள்: க. ரமேஷ்
மழைவளம், நிலவளம், மனிதவளம் இவை அனைத்தும் செழிக்கத் தேவையானது மரவளம்.
இதை உணர்ந்ததால்தான் நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டார்கள்.
ஆனால், நாகரிகம் வளர வளர... தன் தேவைக்காக மரங்களை, மரணிக்கச் செய்து
வருகிறோம், நாம். அதனால்தான் மாதாமாதம் கிடைத்து வந்த மும்மாரி... இப்போது
ஓர் ஆண்டுக்கு மூன்று முறை கிடைத்தாலே பெரிது என்கிற நிலை ஏற்பட்டு
வருகிறது! அதன் விளைவு... பூமிப் பந்து சூடாகி, வறட்சி வாட்டி எடுக்கிறது.