Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, November 19, 2013

வெற்றி ஆண்களுக்கு மட்டுமல்ல

வெற்றி ஆண்களுக்கு மட்டுமல்ல - சாதித்துக் காட்டிய ஸ்ரீவித்யா பிரியா


என்னதான் பெண்கள் எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்கு இணையாகப் பணிபுரிந்தாலும் சில துறைகளை ஆண்களுக்கென்றே நேர்ந்துவிட்டதுபோல இருக்கும். சுற்றி ஆண்கள் மட்டுமே நிறைந்திருக்க, பெண்கள் அங்கே பார்வையாளர்களாகக்கூட இடம்பெற முடியாது. ‘லாஜிஸ்டிக்ஸ்’ எனப்படும் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் சார்ந்த துறையும் ஆண்களால் மட்டுமே அரசாளப்படுவதுதான். ஆனால் அதில் தனித்துக் களமிறங்கி, சாதித்தும் காட்டியிருக்கிறார் வித்யா என்கிற ஸ்ரீவித்யா பிரியா.

ராணுவம் தந்த டப்பா உணவு


உணவை எப்படி உற்பத்தி செய்வது என்ற மிகப் பெரிய கண்டுபிடிப்பைக் கண்டறிந்துவிட்ட பின், உணவைப் பதப்படுத்துதல் என்ற கண்டறிதல் நாகரிக வளர்ச்சியின் எளிய முன்னேற்றம் மட்டும்தான் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், போர்களால் சூழப்பட்டிருந்த 18ஆம் நூற்றாண்டில் பதப்படுத்தப்பட்ட உணவை அனைவரும் வைத்திருக்க வேண்டும் என்று ராணுவ அதிகாரிகள் வலியுறுத்தியதற்குக் காரணம் இருக்கிறது. எதிரிகளைவிட, உணவே பல தோல்விகளை வரவழைத்திருக்கிறது.

இணையதளங்கள் முடக்கப்படுவதை தடுக்க முடியுமா?


கொலை, கொள்ளை செய்திகளைப்போல இணையதளங்கள் செயலிழந்து போவதும் அன்றாட செய்திகளாகிவிட்டன. இந்தியாவின் தீவிர பாதுகாப்பு பகுதியான ராணுவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ) இணையதளத்துக்குள் புகுந்து சீனாவைச் சேர்ந்த சிலர் தகவல்களை திருடினர். இதை தாமதமாக கண்டுபிடித்த அதிகாரிகள் அதை சரிசெய்யவே நீண்ட நாட்களானது. 

காவிரி: சில நினைவுகள்


ஜூன் மாதம் மேட்டூர் அணை திறந்த ஆறாவது நாளில் காவிரியின் எல்லாக் கிளைகளிலும் காவி நிறத்தில் நுங்கும்நுரையுமாகத் தண்ணீர் கரை தொட்டு ஓடும். இதே ஆறாவது நாளில் காவிரிப் பகுதி நகரங்கள், கிராமங்களில் உள்ள எல்லாக் குளங்களையும் குட்டைகளையும் புதுத் தண்ணீரால் நிரப்பிவிடுவார்கள்.

வயிற்றுக்குச் சோறிடும் நுட்பம்


உலகில் ஆதி வேளாண்மை 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியுள்ளது. ஒருவேளை மனித குலம் வேளாண்மையைக் கண்டுபிடிக்காமலேயே இருந்திருந்தால், நாம் உயிர் வாழ்வதற்கு இன்றைக்கும் விலங்குகளை துரத்திச் சென்று வேட்டையாட வேண்டியிருந்திருக்கும்.
ஆதி காலத்தில் மனிதன், உணவு சேகரிப்பவனாகத்தான் இருந்தான். அதில் பெண்களுடைய பங்கே அதிகம் இருந்தது. அதற்குக் காரணம், தன் சந்ததியைப் பெருக்கவும், அடுத்த தலைமுறையைப் பாதுகாக்கவும் வேண்டிய கடமை அவர்களுக்கு இருந்ததுதான்.

வட்ட கல் தட்டுகளும்.. வேற்றுகிரக வாசிகளும்..

ட்ரோபா வட்ட கல் தட்டுகளும்.. வேற்றுகிரக வாசிகளும்..

சீன தொல்பொருள் ஆராய்சியாளர் ச்சூ-பு-அய் (Chu Pu Tei ) இந்த வட்ட (Dropa Stones) கல்தட்டுகளை 1937 ஆம் ஆண்டு வாக்கில் ஒரு குகையில் கண்டுபிடித்தார்.

மேற்படி, குகை சீன-திபெத் எல்லையில் உள்ள பயன்கரஉலா (BayanKara-Ula) என்ற சிகரத்தில் உள்ளது.

கடிகாரம்


 
இந்த உலகத்தில் பலர் யார் என்றே தெரியாமல் அவர்களுடைய சாதனைகளை இருட்டடிப்பு செய்யப்பட்டு இருக்கின்றது ..இதற்க்கு காரணம் அவர் இஸ்லாமிராக இருப்பது தான் ...அப்படிவரலாற்றில் இருந்து முற்றிலுமாக மறைக்க பட்டவர் தான் . 797இல் பக்தாத் அப்பாசியக் கலீபா ஹருன் அல்-ரசீது . இப்போது நாம் பயன்படுத்தும் கடிகாரம் கண்டுபிடித்தவர்களில் இவரும் ஒருவர் .தொடர்ந்து படியுங்கள்...... 

Monday, November 18, 2013

இப்படித்தான் பல் துலக்க வேண்டும்...

இப்படித்தான் பல் துலக்க வேண்டும்...

தினமும் காலை, இரவு என இரண்டு நேரமும் கட்டாயம் பல் துலக்குவதுதான் இதைத் தடுக்க முக்கியத் தீர்வு. சிலர், கடமைக்கு சில நொடிகளிலேயே பல் துலக்கிவிடுவர். சிலரோ, பிரஷ் தேய்ந்துபோகும் அளவுக்கு அதிக அழுத்தம் கொடுத்து பற்களைத் தேய்ப்பர். இரண்டுமே தவறான விஷயங்கள். அதிக அழுத்தம் கொடுத்தோ, அழுத்தமே இல்லாமலோ பல் துலக்கக் கூடாது. மிதமான அழுத்தம் கொடுத்து (படத்தில் காட்டியிருப்பது மாதிரி) குறைந்தது இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை பல் துலக்க வேண்டும். ஜெல் உள்ள பற்பசையைக் கூடுமானவரைத் தவிர்ப்பது நல்லது. அதில் உள்ள சிலிக்கா பவுடர், பல்லின் எனாமலைப் பாழாக்கிவிடும். பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டும்.

இலந்தைப் பழம்..!

இலந்தைப் பழம்..!

சமைக்காத உணவு பழங்கள்தான். பழங்களில் உள்ள பலவகையான சத்துக்கள் குறிப்பாக நார்ச்சத்து, புரதச் சத்து, வைட்டமின்கள் அடங்கியிருப்பதாலும், அவை எளிதில் சீரணமாகி சத்துக்கள் இரத்தத்தில் கலப்பதால் பழங்களை தினமும் சாப்பிடுவது நல்லது.

வெற்றிக் கதை

படித்துக் கொண்டே பார்ட்டைமில் ரூ.40 ஆயிரம்!

விபத்துக்குப் பின்னே விஸ்வரூப வெற்றி...நம்பிக்கையின் நிஜ உருவம் நிவேதா!
''இன்டர்னல் எக்ஸாம் வருது. ரெண்டு அசைன்மென்ட் வேற இன்னும் சப்மிட் பண்ணல. புராஜெக்ட் வொர்க்கும் பெண்டிங்ல இருக்கு. டைமே பத்தலப்பா...'' என்று புலம்பல்ஸில் இருக்கும் காலேஜ் கேர்ள்ஸ்... ப்ளீஸ் மீட் மிஸ் நிவேதா!

வெற்றிக் கதை


"அப்பா இனி ஆட்டோ ஓட்ட வேண்டாம்!"
280 சதுர அடியே உள்ள அந்த வாடகை வீட்டில் பாத்திரங்கள் உருளும் சத்தங்களுக்கு மத்தியில் தேசிய செய்தி சேனல்களுக்குப் பேட்டி கொடுத்துக்கொண்டு இருக்கிறார் பிரேமா ஜெயகுமார். சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் தேர்வில் இந்திய அளவில் முதல் இடம் பிடித்த பிரேமா, ஒரே நாளில் இந்தியப் பிரபல அந்தஸ்து எட்டியதற்குப் பின்னர் பல உறக்கம் தொலைத்த இரவுகளும் தளராத நம்பிக்கையும் இருக்கிறது! இந்தியா முழுக்க 48,320 மாணவர்கள் கலந்துகொண்ட சி.ஏ. தேர்வில் தேர்வானவர்கள் சதவிகிதம் 12.97 மட்டுமே. இதில் பிரேமா 800-க்கு 607 மதிப்பெண்கள் பெற்று (75.88%) முதல் இடம்.

ஆன்லைன் ஷாப்பிங்... ஏமாற்றம் தவிர்க்க உஷார் டிப்ஸ்!



எந்தத் துறை நன்கு வளர்கிறதோ, அந்தத் துறையில் மோசடி பேர்வழிகளின் நடமாட்டமும் அதிகமாகவே இருக்கும். இதற்கு இணையமும் விதிவிலக்கல்ல. முக்கியமாக, ஆன்லைன் ஷாப்பிங்கில் இன்று நடக்கும் ஏமாற்றுவேலைகள் கொஞ்சநஞ்சமல்ல. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள், இதிலெல்லாம் சிக்காமல் இருக்க எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார் பி.கே. ஆன்லைன் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் சீனியர் எக்ஸிக்யூட்டிவ் பிரபு கிருஷ்ணன்.

வேர்ட் டிப்ஸ்


பிரிண்ட் பிரிவியூவில் எடிட்: வேர்ட் டாகுமெண்ட் ஒன்று அச்சில் எப்படிக் காட்சி அளிக்கும் என்று காண, பிரிண்ட் பிரிவியூ என்ற வசதியை வேர்ட் தருகிறது. இதில் அந்த டாகுமெண்ட்டில் உள்ள அனைத்து பார்மட்டிங் வேலைகளையும் ஒரே நேரத்தில் காணலாம். நெட்டு வரிசைகள், பாராக்கள், ஹெடர் மற்றும் புட்டர் மற்றும் படங்கள் என அனைத்தையும் காணலாம். இப்படி பார்க்கும் போது அதில் திருத்தங்கள் மேற்கொள்ள நாம் விரும்பலாம். இதே தோற்றத்தில், திருத்தங்களையும் மேற்கொள்ள வசதி உள்ளது. ஆனால் எப்படி மேற்கொள்வது என்பதுதான் பலருக்குப் புரியாத புதிராய் உள்ளது. அதை இங்கு பார்க்கலாம்.

கம்ப்யூட்டருக்கான பாதுகாப்பான மின்சக்தி


இன்றைய உலகில் நாம் பல டிஜிட்டல் சாதனங்களையே நம்பி இருக்கிறோம். அவை இயங்காமல் போனால், உடனே நம் அன்றாடப் பணிகள் முடங்கிப் போகின்றன. இதனாலேயே இதற்கு மின் இணைப்பு தருவதிலும், அவற்றைச் சீராக வைத்துக் கொள்வதிலும் நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. நம் கம்ப்யூட்டருக்கான மின்சக்தி தரும் சாதனங்களை எப்படி, எந்த வகையில் அமைத்து இயக்க வேண்டும் என இங்கு காணலாம். அவற்றின் மூலம் கிடைக்கும் மின்சக்தியின் தன்மை குறித்தும் சில விவரங்களை இங்கு பார்ப்போம்.

300 வகை மூலிகை மரங்கள்: விவசாயி சாதனை


உத்திரமேரூர்:சாலவாக்கம் அருகே உள்ள கைத்தண்டலம் கிராமத்தில், 370 வகையான மூலிகை மரங்களை பயிரிட்டுள்ளார் ஒரு விவசாயி.

உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் அடுத்துள்ளது ஒழையூர் ஊராட்சி. இவ்வூராட்சிக்கு உட்பட்ட கைத்தண்டலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மாசிலா மணி. 5 ஏக்கர் நிலத்தை பக்குவப்படுத்தி, எழில்சோலை என்ற பெயரில், கடந்த 2009ம் ஆண்டில், பல வகை மூலிகை செடிகளை பயிரிட துவங்கினார்.

என் வீட்டுத் தோட்டத்தில்...


பயணங்களின்போது ரயிலிலோ பஸ்ஸிலோ ஜன்னலோர இருக்கை கிடைத்தால் ஜாக்பாட் அடித்ததுபோல் மனம் குதூகலிப்பது வழக்கம். இந்த குதூகலத்திற்கு முக்கிய காரணம் பச்சைப்பசேல் என்று கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கும் வயல்வெளிகளைப் பார்த்துக்கொண்டே செல்வதுதான். கிராம வாழ்க்கையை நினைத்து நம் அடிமனம் ஏங்குவது இந்த நேரங்களில்தான்.

நினைவுகள் அழிவதில்லை

நீத்தார் நினைவுகளுக்கும், நிற்க வைத்த சிலைகளுக்கும் இது போதாத காலம். முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்துக்கு முட்டுக்கட்டைகள். காமராஜர் சாலையின் நடுவிலுள்ள சிவாஜி கணேசன் சிலையை இடம்பெயர்க்க வழக்கு, குருபூஜைகளுக்கு அரசு ஆதரவளிக்கக் கூடாதென்ற சம்பத் கமிஷன் அறிக்கை - இப்படி தினசரி கிளம்பும் சச்சரவுகளைப் பார்க்கும்போது நினைவுச்சின்னங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது.
கடந்த 100 ஆண்டுகளில் சென்னையில் உள்ள இரண்டு பிரதான சாலைகளில் நடைபெற்ற சிலை அரசியலைப் பார்க்கலாமா?

மஞ்சள் பாலின் திகைக்க வைக்கும் 15 நன்மைகள்!


இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்துள்ள பொருட்களில் ஒன்றாகும். குறிப்பாக, மஞ்சளானது நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஆதரவு மற்றும் அழற்சி குறைபாடுகள் (அதாவது கீல்வாதம்) சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அத்தோடு அதன் நன்மை நின்று விடுவதில்லை.

ரோஜா “குல்கந்து”



ரோஜா பூக்கள் காதலுக்கு மட்டும் அடையாளமான மலரல்ல. இது மருத்துவ குணம் நிறைந்தது. ரோஜா பூவில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குண்டு உடலை ஒல்லியாக்கும் நறுமணத்தயிர்



உலகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய பிரச்சினை உடல் பருமன். கண்ட நேரத்தில் சாப்பிடுவது. நொறுக்குத் தீனிகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் என சாப்பிடுவதால் உடல் பருமனாகிறது. இதனால் இதயநோய் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வு கிடைக்கும் வகையில் யோகர்ட் சாப்பிடுவதன் மூலம் உடல் பருமன் குறையும் என்று தெரியவந்துள்ளது.

இரத்தத்தை சுத்திகரிக்கும் காளான்...!



காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான, உயிர்ச்சத்து டி காளானில் அதிகமாகவும் எளிதாகவும் பெறலாம். உணவுக் காளான்கள் சுவையும் சத்துமிக்க சிறந்த உணவாகப் பயன்படுகின்றன.

ஆஸ்துமாவை விரட்டும் வெல்லம்


ரத்த சோகைக்கு தீர்வு நம் வீட்டு சமையல் அறையிலேயே இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது. தவிர இதிலுள்ள சத்துக்கள் பொட்டாஷியம், சோடியம், கால்ஷியம், பாஸ்பரஸ், மற்றும் ஜின்க் ஆகும். வெல்லத்தில் மினரல்ஸும் அதிகம் இருப்பதால் சத்துணவாக இது அமைந்துள்ளது. இதில் மேக்னிஷியம் இருப்பதால் நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்தும், தசைகளை ரிலாக்ஸ் செய்யும்.

பச்சை தேநீர் (Grean Tea)


பச்சை தேநீர் (Grean Tea) அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்...!

* ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

* உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

* உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

Sunday, November 17, 2013

பைங்கிளிகளின் புகலிடம்


"உயிர்மூச்சு" பகுதியில் வெளியாகி இருந்த "வீடு தேடி வந்த சிட்டுக்குருவிகள்" கட்டுரையைப் படித்துவிட்டு பாராட்டியிருந்த வாசகர் வடிவேல்முருகன், நெரிசல் மிகுந்த சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையில் ஒரு வீட்டைத் தேடி வந்து பச்சைக்கிளிகள் உணவருந்திச் செல்லும் அற்புதம் பற்றிய பதிவை எதிர்பார்க்கிறோம் என்று கடிதம் எழுதியிருந்தார்.

கட்டுமானச் செலவைக் குறைப்பது எப்படி?


வீடு கட்டுவதற்கு ஆகும் செலவைக் கேட்டாலே பலருக்கும் தலை சுற்றி விடுகிறது. எகிறிக் கொண்டே இருக்கும் மனையின் விலையும் கட்டுமானப் பொருட்களின் விலையேற்றமும் வீடு வாங்குவோருக்கும் கட்டுபவர்களுக்கும் பெரும் சவாலாக இருந்துவருகிறது.
வீடு கட்டியவர்களும், வாங்கியவர்களும் சொல்லும் அனுபவப் பாடங்களைக் கேட்டால் பலருக்கு வீடு கட்டும் ஆசையே போய்விடும். வீடு கட்டுவதற்கு என்று ஒரு பட்ஜெட் போட்டால், அதையும் தாண்டி செலவு எங்கோ சென்று விடுவதுதான் தற்போதைய நிலை.