Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, November 23, 2013

அதிவேக இண்டர்நேர்ட் பயன்படுத்தும் முறை

வேகத் தடைகள் இன்றி அதிவேக இண்டர்நேர்ட் பயன்படுத்தும் முறை

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.
இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.

அன்று 20 பைசாவுக்கு கடலைமிட்டாய்


அன்று
20 பைசாவுக்கு கடலைமிட்டாயும்,
10 பைசாவுக்கு தேன்மிட்டாயும்,
5 பைசாவுக்கு புளிப்பு மிட்டாயும்,
வாங்கும் போது தெரியவில்லை
இப்பொழுது இந்த
பைசா இருக்காது என்று..

நொங்கு வண்டி...


நொங்கு வண்டி...
இந்த
மாதிரி வண்டி ஓட்டி ரொம்பநாள்
ஆச்சு...
இப்ப நம் வீட்டில் இருக்கும்
நம் குழந்தைகளுக்கு இந்த
வண்டியைப்பற்றி ஒன்றுமே தெரிய
வாய்ப்பில்லை ஆனால் ஒரு கால்த்தில்
இது தான் எனக்கெல்லாம் காண்டசா,
பிரிமியர் பத்மினி கார் போல

பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை



ஒரு நாட்டின் பொருளாதாரத்தைநிர்ணயம் செய்வதில் கச்சா எண்ணெய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் எவர்க்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். ஏனெனில் ஒவ்வொரு முறை கச்சா எண்ணெயின் விலை உயரும்போதும் அது உலகளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. உலகநாடுகளின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அதி முக்கிய காரணியான இந்த கச்சா எண்ணெய்யை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் யார் தெரியுமா நண்பர்களே?. தற்போது ஈராக்கியர்கள் என்றபெயரில் அழைக்கப்படும் பண்டைய பாபிலோனியர்கள் தான்கச்சா எண்ணையை உலகில் முதன்முதலில் பயன்படுத்தியவர்கள் ஆவர்.

மாற்றத்தை விரும்புவோர் கடக்க வேண்டிய படிகள்


மாற்றத்தை விரும்பும் யாரும் கீழ்க்காணும் நான்கு நிலைகளை கடந்தே ஆகவேண்டும். இந்த நிலைகளை காணாதவர்களால் – கடக்காதவர்களால், மாற்றத்தை காண முடியாது. ஆனால் ஒருவர் எவ்வளவு விரைவில் இந்த நான்கு நிலைகளுக்கு ஆட்படுகிறாரோ, அத்தனை விரைவில் அவரது ஏற்றம் தரும் மாற்றம் நிகழ்ந்தே தீரும்.

பேஸ்புக்




பேஸ்புக் எவ்வளவு சுவாரஸ்யமானதோ அந்தளவு ஆபத்தானதும் கூட. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிபுணர் டேவிட்வைட்லெக் பேஸ்புக் இனது இன்னொரு பக்கத்தை இவ்வாறு விளக்குகின்றார்.

இதில் சில படங்களையோ அல்லது தகவல்களையோ போடுவது நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்தை, அல்லது ஒரு குற்றத்தில் சிக்கும் ஆபத்தை அல்லது அதை விட மோசமான ஆபத்ததை ஏற்படுத்தக் கூடியது.

குங்குமப் பூ




குங்குமப் பூ சாப்பிட்டால் சிவப்பாயிருக்கலாம் எனும் நம்பிக்கை பலரிடமுள்ளது. இது உண்மைதானா?

குங்குமப் பூவிற்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. ஆனால் சிவப்பு நிறத்தைக் கொடுக்காது.

ஆந்திராவில் அவசரகோலத்தில் ராக்கெட் இணைப்புக் கூடம்?

ஆந்திராவில் அவசரகோலத்தில் ராக்கெட் இணைப்புக் கூடம்? - நடுநிலை விஞ்ஞானிகள் அதிர்ச்சி

இந்தியாவில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளத்தை குலசேகரப்பட்டினத்தில் அமைப்பதற்கான நியாயமான சாத்தியக்கூறுகள் மற்றும் அவை சார்ந்த விவாதங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் - சர்ச்சைகளுக்குத் தீர்வுகள் காணப்படாமலேயே ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு அச்சாரமாக ரூ.363.5 கோடி மதிப்பில் ராக்கெட் இணைப்பு தொழிற்கூடம் (Vehicle assembly building) அமைப்பதற்கான பணிகளை ஆந்திர அதிகாரிகள் அவசர கோலத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.

இஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிக்கும் சவூதி நடவடிக்கை



(‘மக்கா படுகொலைகள் 1987: பின்னணியும் ஹரமைனின் எதிர்காலமும்’ நூலிலிருந்து...)

முஸ்லிம்கள் இன்று ஏறத்தாழ எல்லா முனைகளிலும் தாக்குதலுக்கு ஆளாகிவருகின்றனர் —இராணுவம், கலாச்சாரம் மற்றும் இடைப்பட்ட சகல முனைகளிலும் தாக்கப்படுகின்றனர். ஈராக், ஆஃப்கானிஸ்தான், பாலஸ்தீன், செச்சன்யா போன்ற நாடுகளில் அந்நியப் படைகளால் அவர்கள் ஆயிரக்கணக்கில் பலிகொடுக்கப்படுவது மட்டுமின்றி, முஸ்லிம் நாடுகள் பலவற்றின் சொந்த இராணுவங்களே கூட முஸ்லிம்களைத் தாக்கி வருகின்றன —எடுத்துக் காட்டு: பாகிஸ்தான், எகிப்து, அல்ஜீரியா, துனீஷியா, மொராக்கோ. இந்த இராணுவத் தாக்குதல்கள் போதாதென்று மேற்குலகின் கலாச்சாரத் தாக்குதல்கள் வேறு. எனினும், சவூதிகள் புனித மக்கா-மதீனா நகரங்களில் —முஸ்லிம்கள் இவையிரண்டையும் சேர்த்து ஹரமைன் என்றழைக்கும் அந்நகரங்களில்— எடுக்கும் நடவடிக்கையோடு ஒப்பிடும்போது, மேற்கண்ட கொடூரமான யதார்த்தம் கூட முக்கியத்துவமற்றதாகத் தெரிகிறது. பேராசையும் வஹாபிஸ ஆர்வ வெறியும் நச்சுக்கலவையாக சேர்ந்துகொண்டு இஸ்லாமிய நினைவுச் சின்னங்களின் அழிப்புக்கு வழிவகுத்துள்ளது. இவை, துவக்ககால இஸ்லாத்தின் செழிப்பான வரலாற்றுப் பாரம்பரியத்தை இன்னும் சில வருடங்களில் நிரந்தரமாகத் துடைத்தழித்துவிடும் எனத் தெரிகிறது.

பிரமாண்டமாய் ஓர் உலகம்-5


Dragon Mart:
dr1
துபாயில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று டிராகன் மார்ட் (Dragon Mart). துபாய்க்கு வெளியில், ஏறத்தாழ 40 கி.மீ தூரத்தில் இண்டர் நேஷனல் சிட்டியில் பிரமாண்டமாக அமைக்கப் பட்டிருக்கிறது. அதன் கட்டிட அமைப்பே டிராகன் வடிவத்தில் அமைக்கப் பட்டுள்ளது ஒரு வியப்பாகத் தானிருக்கிறது. 4000க்கும் மேற்பட்ட ஸ்டால்கள், ஷோ ரூம், 2500 கார்கள் நிறுத்தும் அளவுக்கு கார் பார்க்கிங் என பறந்து விரிந்து காணப் படுகிறது. இதன் மொத்த நீளம் 1.2 கி.மீ என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இதன் பிரமாண்டத்தை. இது 2004ல் கட்டி முடிக்கப் பட்டது.

உங்கள் சொத்து வாரிசுக்கா, வழக்குக்கா?


தமிழகத்தில் 2012 டிசம்பர் வரை 7.8 லட்சம் சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்குச் சொத்துக்களைப் பிரித்துக் கொடுப்பதில் செய்யும் குழப்பம், தயக்கம் மற்றும் சரியான முடிவுகளைப் பத்திரப் பதிவு செய்யாதது, இவைகளே வழக்குகளுக்குக் காரணங்கள்.

கண்ணாடியில் பிம்பமாய் திருக்குறள்!


நூற்றுக்கணக்கான ஆண்டுகளைக் கடந்தும், இன்றைய தேவையை மனதில் வைத்து எழுதியதுபோல, இளமை ததும்பும் திருக்குறளை, சாதனை முயற்சியாகப் பலரும், பலவிதங்களில் சோதித்துப் பார்த்து விட்டனர். 3 வயது சிறுவன் அனைத்து திருக்குறளையும் மனப்பாடமாகக் கூறுகிறான். அரிசியில் ஒரு திருக்குறளை எழுதுகிறார் என அடிக்கடி திருக்குறளை வைத்து சாதனை செய்யும் திறமைசாலிகள் ஆங்காங்கே உருவெடுத்த வண்ணமே உள்ளனர்.

ஹோம்பேஜில் கூடுதல் வசதிகளைத் தரும் கூகுள்


ஹோம்பேஜில், வானிலை, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட கூடுதல் வசதிகளை அளித்து, வாடிக்கையாளரின் தனிப்பட்ட தேடல்களை மிகவும் எளிமைப்படுத்தியுள்ளது கூகுள்.
அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான சில தகவல்களை ஒருவர் இணையதளத்தில் இனி தனியே தேட வேண்டி இருக்காது. அவற்றை கூகுள் ஹோம் பேஜிலேயே காண முடியும்.
கூகுள் உற்பத்தி மேலாண் இயக்குநர் (ஜப்பான்), கென்டாரோ டொகுசேய் இதுதொடர்பான நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை பங்கேற்றார் அப்போது அவர் கூறியதாவது:

உப‌யோக‌முள்ள‌‌ வீட்டுக்குறிப்புகள்



1. டிவி, குளிர்சாதனப்பெட்டி, ட்யூப் லைட் இவற்றை உபயோகத்திற்குப்பின் அணைத்து விட்டு மீண்டும் உடனே போடக்கூடாது. ரெஃப்ரிஜிரேட்டரில் கம்ப்ரெஸ்ஸரும், டிவியில் பிக்சர் ட்யூபும் ட்யூப் லைட்டில் பாலண்டும் பழுதாகி விடும். நிறுத்திய பின் உள்ளே மாற்றங்கள் நிகழ்ந்து பூர்த்தியாக சில நிமிடங்கள் பிடிக்கும். சில நிமிடங்கள் விட்டு மறுபடியும் போடுவது நல்லது.

2. குளிர்சாதனப்பெட்டியைத் துடைக்கும்போது பச்சைக்கற்பூரம் கலந்த நீரினால் துடைத்தால் பூச்சிகள், சிறு வன்டுகள் உள்ளே நுழையாது.

இந்தியாவில் இஸ்லாம்-3

ஆண்டு – தேதிகளில் காணப்படும் குளறுபடிகள்



இன்று நம் கைகளில் இருக்கும் வரலாற்று நூல்களில் காணப்படும் ஆண்டு தேதிகள் உண்மையானவையல்ல. வரலாற்று நூல்களில் கி.பி.10-ம் நூற்றாண்டிற்கு முன்புள்ள அனைத்தும் ஜோதிட முறையில் கணித்து எழுதப்பட்டவை. ஒவ்வொரு அரசர்களும் ஆட்சி பீடத்தில் ஏறும் நாள் முதல் ஆட்சி ஒழியும் நாள்வரையிலான ஆண்டுகள்தான் அன்று கணக்கிடப்பட்டு வந்தன. தொடர்ச்சியான ஒரு ஆண்டு கி.பி.10-வது நூற்றாண்டுக்கு முன்புவரை நடைமுறையில் இல்லாமல் இருந்தது. கீழே தந்துள்ள தகவல்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.

Friday, November 22, 2013

இந்தியாவில் இஸ்லாம்-2

வனக்குறைவால் அழிந்துப்போன விலைமதிப்பற்ற ஆவணங்கள்

சங்க காலத்துக்குப் பின்னர் கி.பி. 6, 7, 8 நூற்றாண்டுகள் தமிழகத்தையும், கேரளாவையும் பொறுத்தவரையில் வரலாற்றில் இருண்ட காலமாகும்(?) “சங்க காலத்தைப் பின்தொடருவது வரலாற்று ரீதியாகப் பார்ப்பின் விடியாத இரவு. தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகளுக்கு அதிகமான காலத்தைப் பற்றி நமக்கு எதுவும் அறிய வாய்ப்பில்லை” என்று திரு. கே.ஏ. நீககண்ட சாஸ்திரி தனது தென்னிந்திய வரலாறு (மலையாள மொழிபெயர்ப்பு) நூலில் பக்கம் 159-ல் குறிப்பிடுகிறார்.

Thursday, November 21, 2013

பிரபஞ்சம்: அணுவிலிருந்து அணுஉலைவரை


பெருவெடிப்புக்கு (பிக் பேங்- Big Bang) பிறகுதான் பிரபஞ்சம் உருவானது என்று தற்கால ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். அந்த வெடிப்புக்குப் பிறகு என்ன நடந்தது? பிரபஞ்சம் தற்செயலாக இயங்குகிறதா அல்லது ஒரு விதியைப் பின்பற்றி இயங்குகிறதா? அறிவியலாளர்களை வெகு காலமாகத் தூங்க விடாமல் செய்தவை இந்தக் கேள்விகள்தான்.
பெருவெடிப்புக்குப் பிறகு நடந்ததை ஒரு கதைபோல் பார்ப்போம்.

எங்கே ஒற்றுமை? எங்கே சகோதரத்துவம்?

கட்டுரையாளர்:எம்.எஸ்.அப்துல் ஹமீது எழுத்தாளர் / சமூக பார்வையாளர்/விடியல் வெள்ளி மாத இதழ் துணை ஆசிரியர்

அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்... 


ஒரு குடும்பத்தில் பரஸ்பரம் அன்பும், பண்பும், பந்தமும், பாசமும் நிலவினால் அந்தக் குடும்பம் குதூகலிக்கும். ஓர் ஊரிலுள்ள மக்கள் சண்டையிட்டுக் கொள்ளாமல் அண்ணன், தம்பிகளாக அன்பைப் பொழிந்து, சகோதர பாசத்துடன் வாழ்ந்தால் அந்த ஊர் உருப்படும்.

ஒரு சமுதாயத்தில் ஒற்றுமையும், சகோதரத்துவமும் நீக்கமற நிறைந்திருந்தால் அந்தச் சமுதாயம் – அந்த உம்மத் உய்வடையும். வெற்றி பெறும். ஆம்! இஸ்லாமிய மார்க்கத்தின் தனித்தன்மையே சகோதரத்துவம்தான்.

நூஹ் நபியின் கப்பல் தங்கிய மலை கண்டுபிடிப்பு!

இதனை முழுமையாக படிக்கவும். படித்த பின் இதனை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும்.  “திருக்குர்ஆன் வசனத்தை நிருபிக்கும் 16 ஆயிரம் அடி உயரமுடைய மலையின் மேல் உள்ள ஒரு கப்பல்”

இந்தியாவில் இஸ்லாம்-1

இந்தியாவில் இஸ்லாம்-1 தோப்பில் முஹம்மது மீரான் 

 தோப்பில் முஹம்மது மீரான் அவர்கள் நாடறிந்த நல்ல சிறந்த எழுத்தாளர், பிரபல நாவலாசிரியர். தோப்பில் மீரான் எழுதிய நாவல்கள்-புதினங்கள், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான வாசகர்களால் பாராட்டப்பட்டவைகளாகும்.
‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ ‘கூனன் தோப்பு’ ‘தங்கராசு’ இவைகள் மீரானின் சிறந்த படைப்புகள்.

‘ஏவுதளம்’ இங்கே வந்திட ஏன் வீண் தயக்கம்?



மாவட்டத்தில் உள்ள மகேந்திரகிரியைச் சேர்ந்த திரவ எரிவாயு மையத்தில்
பணிபுரிவோர் அனுப்பிய வேண்டு கோளினை பரிந்துரை செய்து நான் கடந்த 19-8-2013 அன்று பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கு கடிதம்
அனுப்பியிருந்தேன். கனிமொழி என்னிடம் வேண்டுகோள் கடிதத்தைக் கொடுத்ததோடு, மாநிலங்கள் அவையிலும் அதைப்பற்றி எழுப்பிய கேள்விக்கு,
அளிக்கப்பட்ட பதிலில், ""“ISRO has two operational launching pads located at Satish Dhawan Space Centre, Sriharikota - the First Launch Pad and the Second Launch Pad, with necessary infra structure to support eight launches per year. The launching infra structure at Sriharikota will be strengthened with the addition of Second Vehicle Assembly Building at SLP, which will enhance the launch frequency to twelve launches per yearby 2017”" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும்: கருணாநிதி

குலசேகரப்பட்டினத்தில் 3-ஆம் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

Wednesday, November 20, 2013

நிஜக் கதை








குற்றாலம் பக்கம் உள்ள ஆய்க்குடி அமர்சேவா சங்கம்

 கழுத்திற்கு கீழுள்ள அவயங்கள் செயல்படாத இருபெரும் சக்திகளான ராமகிருஷ்ணன், சங்கரராமன் ஆகியோரை முறையே தலைவராகவும், செயலாளராகவும் கொண்டு செயல்பட்டுவரும் உடல் ஊனமுற்றோரை முன்னேற்றும் மையம்.

Tuesday, November 19, 2013

பிரசவத்தை எளிதாக்க

பிரசவத்தை எளிதாக்க கார் மெக்கானிக் கண்டுபிடித்த புது கருவி


 நியுஜெர்சி: அர்ஜென்டினாவை சேர்ந்த கார் மெக்கானிக் ஜோர்ஜ் ஓ டன். இவர் பிரசவத்தை எளிதாக்கும் நவீன கருவியை கண்டுபிடித்துள்ளார். இந்த கருவிக்கு உலக சுகாதார நிறுவனம் விருது வழங்கியுள்ளது.இவர் நண்பர்களுடன் விருந்து சாப்பிட்ட போது ஒயின் பாட்டிலின் உள்ளே கார்க் போய்விட்டது. ஆனால் பந்தயத்திற்காக ஜோர்ஜ் பாட்டிலின் உள்ளே பிளாஸ்டிக் பையை நுழைத்தபின் ஊதிப் பெரிதாக்கியதில் கார்க் பிளாஸ்டிக் பைக்குள் மாட்டிக் கொண்டு, இழுத்ததும் அழகாக வெளியில் வந்துவிட்டது.

நாம் அருந்தும் தண்ணீரைப் பற்றி



எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் ? சில சந்தேகங்கள் நாம் அருந்தும் தண்ணீரைப் பற்றியது !!

1.இரவில் தூங்க செல்லும் முன்னர் மிதமான சூட்டில் உள்ள சுடு தண்ணீர் அருந்திவிட்டு படுக்கச் செல்வது சரியா

2.அல்லது சுட வைத்த தண்ணீரை ஆற வைத்துதான் அருந்திவிட்டு தூங்க செல்லவேண்டுமா.

3.பகலில் அதிக முறை குறைந்த தண்ணீர் அருந்துவது சரியான முறையா