Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, April 9, 2015

எலும்பை இரும்பாக்கும் எனர்ஜி ஃபுட்ஸ்!

' 'ஓடிப்பிடிச்சு விளையாடிட்டு இருந்த என் பையன் தடுக்கி விழுந்திட்டான்... லேசான காயம்தான். காலை மடக்க முடியலைனு அழுதான். பதறிப்போய், அவனை டாக்டர்கிட்ட அழைச்சிட்டுப் போனேன். எலும்பு முறிவுனு சொல்லிட்டாங்க... சின்ன அடிதான்... ஃப்ராக்சர் ஆகுற அளவுக்கு ஏன் வந்ததுனு தெரியலை!'' என்று ரொம்பவே வருத்தப்பட்டார் ஒரு பெண்மணி.  

பைல்ஸ் என்னும் மூல நோய்க்கான எளிய இயற்கை வைத்தியங்கள்!


கோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மூல நோய் என்று அழைக்கப்படும் பைல்ஸ். பொதுவாக இந்த பிரச்சனையால் 45-65 வயதிற்குட்பட்டோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது சில இளம் வயதினர் கூட இப்பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள்.

Wednesday, April 8, 2015

வெயிலு.. வெயிலு.. வெயிலம்மா!


ஜில்லுனு சில டிப்ஸ்
வ ந்தாச்சு கோடை! ‘மழையா பெய்தது!’ என்று வியக்கும் வண்ணம் எங்கும் தெப்பலாக நனைந்தபடி நடமாடுகிறார்கள் மக்கள். ‘வெயிலடிச்சா வேர்க்கத்தான் செய்யும்’ என்று சாதாரணமாக விட்டுவிட முடியாது. உடலின் நீர்ச்சத்து அளவுக்கதிகமாக வெளியேறிவிட்டால், ‘சன் ஸ்ட்ரோக்’ பாதிப்பு ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்து நேரலாம்.
இந்தக் கோடை வெப்பத்தில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி? இந்த நேரத்தில் எந்த அளவுக்கு தண்ணீரோடு நாம் ஐக்கியமாகியிருக்கவேண்டும்? இதோ, விளக்குகிறார்... சென்னை - ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் எஸ்.கே.ராஜன்.

Tuesday, April 7, 2015

துபையில் பணி வாய்ப்பு – ஒரு சிறப்பு பார்வை!


துபை – பெரும்பாலான இளைஞர்களின் கனவு நகரம். உலகில் வளர்ந்து வரும் முன்னணி நகர்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராய் உயர்ந்து நிற்கும் துபையும் ஒன்று.

Monday, April 6, 2015

மண் பானைகளுக்கு மவுசு வருமா?

இயற்கையான முறையில் குடிநீரை சுவையாக்கும் மண்பாண்டங்களின் உபயோகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. வீடுகளில் மட்டுமன்றி, இப்போது குடிநீர்ப் பந்தல்களிலும் மண் பானைகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் குடிநீர் கேன்களே ஆக்கிரமித்துள்ளன.

சிக்கன் சாப்பிடுவீங்களா? அப்ப நீங்க ஆரோக்கியசாலி தான்!


அவைச உணவை விரும்பாதவர்கள் இருக்கமாட்டார்கள். அவ்வாறு அவைச உணவுகள் சாப்பிடாமல், முதன் முறையாக அசைவ உணவுகளை சாப்பிட போகிறவர்கள் சிக்கனைத் தான் முதலில் சுவைப்பார்கள்.
ஏனெனில் சிக்கன் அவ்வளவு ருசியாக இருக்கும். அதுமட்டுமின்றி, இது மிகவும் பாதுகாப்பானதும் கூட. இறைச்சியில் எத்தனை வகைகள் இருந்தாலும், பெரும்பாலானோருக்கு சிக்கன் தான் பிடிக்கும். இத்தகைய சிக்கனில் ஆரோக்கியமும் உள்ளது, அதே சமயம் தீங்கும் நிறைந்துள்ளது. அவை அனைத்து நாம் சாப்பிடும் விதத்தில் தான் உள்ளது.

Saturday, April 4, 2015

இரண்டே நாட்களில் முகத்தில் உள்ள கருமை நீங்க சில அற்புத வழிகள்


News
கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது. இத்தனை நாட்கள் பொத்தி பொத்தி காப்பாற்றி வந்த சருமம், கோடையில் நொடியில் கருமையாகிவிடும்.

நீங்கள் சாப்பிடும் சூப் நல்லதா... கெட்டதா?!

நீங்கள் சாப்பிடும் சூப் நல்லதா... கெட்டதா?!


மாநகரங்களில் மட்டுமல்ல, சிறுநகரங்களிலும்கூட தற்போது மலைக்கவைக்கும் எண்ணிக்கையில் முளைவிட்டுக் கொண்டிருக்கின்றன சூப் கடைகள். இதன் அலாதி சுவை சுண்டியிழுப்பதால், சுற்றிச் சுற்றி வருகின்றன குழந்தைகள்! 'சூப் குடிப்பது ஆரோக்கியம்' என்கிற பிரசாரத்தால் படையெடுக்கின்றனர் பெரியவர்கள்!

பனையும் பயனும்!



பனைமரம் ஒரு பாவப்பட்ட மரம்! 

அதற்கு நாம் எந்த பராமரிப்பும் செய்யாமலே அது நமக்கு ஏராளமான பலன்களைக் கொடுத்தது. 

இன்றும் கொடுத்து வருகிறது. 

ஆனால் மனித இனமாகிய நாம் அதன் பயன்களை எல்லாம் மறந்து நன்றிகொன்றதனமாக அவற்றை அழித்து சூளைகளில் இட்டு எரித்து வருகிறோம். 

Thursday, April 2, 2015

பள்ளிப்படிப்பை தாண்டாத மதுரை விஞ்ஞானி...


மதுரை மாவட்டத்தில் பல அரிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து தேசியவிருது பெற்றவர் எம்.அப்துல் ரசாக். மதுரை பீ.பீ.குளம் நபிகள் நாயகம் தெருவில் உள்ள சிறு வீட்டில் வசித்து வருகிறார். 45 வயதான இவர், ஒரு எலக்ட்ரீசியன். ஆனால் புதிய கண்டுபிடிப்புகளின் மீது ஆர்வமுடையவர். கஷ்டமான குடும்பத்தில் பிறந்த இவர், 7வது வரைதான் படித்துள்ளார்.

வீடு சின்னதா இருந்தா.....

முன்பெல்லாம் முன்பக்கம், பின்பக்கம், தோட்டம், தாழ்வாராம், கிணறு என ஒரு வீடு என்றால் இத்தனையும் சேர்ந்ததாக இருந்தது. ஆனால் தற்போது வீடு என்றால் ஒரு அறை அல்லது இரண்டு அறைகள் கொண்டதாகக் கூட உள்ளது.

Sunday, March 29, 2015

கல்வி கடன் பெற தேவைப்படும் ஆவணங்கள்


மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்குவதற்கு ஒவ்வொரு வங்கியும், ஒவ்வொரு விதமான ஆவணங்களை கேட்கின்றன. ஆனால் பொதுவாக அனைத்து வங்கிகளும் கேட்கும் ஆவணங்கள், அரசு அதிகாரியின் சான்று பெற்ற (அட்டஸ்டட்) மாணவரது பிறப்பு சான்றிதழ் மற்றும் குடியிருப்பு சான்றிதழ் விண்ணப்பிக்கும் மாணவரது பாஸ்போர்ட் அளவு புகைப்படம்,

மட்டன் சாப்ஸ்


என்னென்ன தேவை?

கறி - 500 கிராம்
பச்சைமிளகாய் - இரண்டு
தனியாதூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

Thursday, March 26, 2015

கோக்கனட் பிஷ் ப்ரை

தேவையான பொருட்கள்:
எலுமிச்சை ஜூஸ்                 -      2 ஸ்பூன்
கறிவேப்பிலை             -      கொஞ்சம்
மல்லிதழை                 -      தேவையான அளவு
இஞ்சி                     -      1/4துண்டு
உப்பு                      -      1/4 டீ ஸ்பூன்
எலுமிச்சை மிளகு பொடி    -      1ஸ்பூன்
பூண்டு பொடி               -      1/4 தேக்கரண்டி
வஞ்சரமீன்                -      250 கிராம்
எண்ணை                  -      4 ஸ்பூன்
மிளகாய்                  -      1
மிளகாய்தூள்              -      1
தேங்காய் பூ                -      கொஞ்சம்
சோளமாவு                -      2 தேக்கரண்டி

Sunday, March 22, 2015

சிறுநீரக கல் பிரச்சினைக்கு இயற்கை வைத்தியம்


சிறுநீரக கல் பிரச்சினைக்கு ஆபரேஷன் (அறுவை சிகிச்சை) இல்லாமல் இயற்கை முறையில் குணப்படுத்தலாம்.

Saturday, March 21, 2015

உலகின் முதல் ஹைட்ரஜன் ட்ராம் கார் சீனாவில் தயாரிப்பு

பெய்ஜிங்: சீனாவில் ட்ராம் வண்டிகள் இயங்குகின்றன. அவை பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்குகின்றன. ஆனால் தற்போது அங்கு ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ட்ராம் கார் தயாரிக்கப்பட்டுள்ளது. லியாங் ஷீயான்யிங் தலைமையிலான என்ஜினீயர்கள் குழு இக்காரை உருவாக்கியுள்ளனர். இது மணிக்கு 70 கி.மீட்டர் வேகத்தில் செல்லக்கூடயது. இந்த காரில் மொத்தம் 60 இருக்கைகள் உள்ளன. 380 பேர் வரை பயணம் செய்யலாம். 

ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தி நோயை விலை கொடுத்து வாங்காதிங்க!


ரீபைண்ட் ஆயில் தானே இப்போ பெரும்பாலும் பயன்படுத்துறோம். யோசிச்சு பாருங்க உங்க ஊர்ல மாரடைப்பு இருக்குறவங்களோட எண்ணிக்கை குறைஞ்சு இருக்கா இல்ல கூடி இருக்கா. இதுல என்ன கொடுமைனா முன்னயாவது 60, 70 வயசு ஆனவங்களுக்கு பெரும்பாலும் ஹார்ட் அட்டாக் வந்தது. இப்போ தெல்லாம் 25,30,35 வயசு உள்ளவங்களுக்கே ஹார்ட் அட்டக் வருது. அப்போ ரீபைண்ட் ஆயில் உபயோகிச்ச பிறகு நோயின் அளவு ஜாஸ்தி தானே ஆகியிருக்கு?..

Thursday, March 19, 2015

கோதுமையின் மகத்துவங்கள்


தானிய வகைகள் என்பது நம் அன்றாட வாழ்வில் பெரும் பங்கு வகிக்கின்றது.
நவதானியங்கள் என்பது சமையிலில் ருசிக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. இந்த தானிய வகையில் ஒன்று தான் கோதுமை.

Tuesday, March 17, 2015

அறிவியல் செய்திகள்


( CALCULATER ):கால்குலேட்டர்களை கணக்குப்போடுவதற்கு மட்டும் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்த நாடுகளில் பல்வேறு பயன்பாட்டுக்கும் கால்குலேட்டரைப் பயன்படுத்துகிறார்கள். சமையலில் எந்தப் பொருளை எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை அளந்து பார்க்க கிச்சன் கால்குலேட்டரை பயன்படுத்துகிறார்கள். ஒருவர் தனது உடல் எடைக்கு ஏற்ப எவ்வளவு சாக்லெட் சாப்பிடலாம் என்று பார்க்க சாக்லேட் கால்குலேட்டர் இருக்கிறது. நாம் சுவாசிக்கும் காற்றில் கார்பன் மிகுந்திருக்கிறதா? என்பதை கவனிக்க கார்பன் கால்குலேட்டர் இருக்கிறது. மருந்து சாப்பிடும் நோயாளிகளுக்கு சரியான அளவில் மருந்து சாப்பிட உதவும் `ஆர்கிமெடிஸ்` கால்குலேட்டர்கள் இருக்கின்றன.

Thursday, March 12, 2015

பிளஸ் 2 முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

இன்றைய உலகில் பலர் படித்தவுடன் உடனடியாக பணி வாய்ப்புகள் கிடைக்கும் படிப்பையே தேர்வு செய்ய விரும்புகிறார்கள். பள்ளிப்படிப்பில் நீங்கள் அதிக மதிப்பெண் பெற்றவராக இருக்கலாம் அல்லது சுமாரான மதிப்பெண் பெற்றவராக இருக்கலாம். இதில் பெரிய அளவு பிரச்னை எதுவுமில்லை. உங்கள் எதிர்காலத்தின் பொருட்டு நீங்கள் எதை தேர்வு செய்கிறீர்கள் மற்றும் அந்த வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்பது தான் முக்கியம். 

Wednesday, March 11, 2015

சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?


ஒன்று : கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம்.
இரண்டு : எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காதாம்.

Tuesday, March 10, 2015

முள் முந்திரி


குமரி மாவட்டத்தில் பாஞ்சிக்காய்,முள்ளுசக்கை,சீமாத்திக்காய் என்றெல்லாம் அழைக்கப்படும் முள்முந்திரி ஒருகாலத்தில் ஒவ்வொரு வீட்டு வேலி ஓரத்திலும் காய்த்து தொங்கும்..!

புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க



வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

போலி முட்டை...உஷார் !உஷார்!!



போலி முட்டை தயாரிக்க 7 வித ரசாயணங்களை பயன்படுத்துகிறார்கள் சீனர்கள். அதில் கால்சியம் கார்பனேட், ஸ்டார்ச், ரெசின், ஜெலட்டின், அலும் மற்றும் சில ரசாயணங்கள் அடக்கம்.

Monday, March 9, 2015

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை சுற்றி வர சோலார் விமானம் அபுதாபியிலிருந்து இன்று புறப்பட்டது.!



முதல் முயற்சியாக உலகம் முழுவதும் 35 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 617 மணி நேரம் சுற்றி வர ஏற்பாடு செய்யப்பட்டு துளியளவும் எரிபொருள் உபயோகிக்காமல்