Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, January 3, 2014

தமிழ்நாட்டின் 7 புகழ்பெற்ற அரண்மனைகள்

தமிழ்நாட்டை பல்வேறு காலகட்டங்களில் சோழர்களும், பாண்டியர்களும், பல்லவர்களும் ஆண்டு வந்துள்ளனர். இவர்களைத் தவிர ஏராளமான குறுநில மன்னர்களும், ஜமீன்தார்களும் தமிழ்நாட்டின் பல பகுதிகளை ஆண்டுள்ளனர். அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் நாம் வாழவில்லை என்றாலும், அந்த ராஜரீக காலத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அவர்களுடைய அரண்மனைகள் பல இன்று நம்மிடையே எஞ்சியுள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று காணக்கூடிய அரண்மனைகளில் பிரபலமாக அறியப்படும் 7 அரண்மனைகள் 

2013 டாப் 10 பிரச்னைகள் - தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு



மக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அமைதியான சூழலை உருவாக்கித் தருவதுதான் சட்டம் ஒழுங்கின் அடிப்படை. ஆனால், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, கடந்த ஆண்டும் ஒரு பெரிய விடுப்பில் சென்றுவிட்டதுபோல் இருக்கிறது!
மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் பெருவிழாவை ஒட்டி மரக்காணத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின் தொடர்ச்சியாக, வட மாவட்டங்கள் வன்முறைப் பூமியானது. பேருந்துகளுக்குத் தீவைப்பு, கல் எறிதல் எனப் பெரும் பதற்றம் நிலவியது. விழுப்புரம், செங்கல்பட்டு பிராந்தியங்களில் பேருந்துப் பயணம் மேற்கொள்வதே பெரும் சவாலாக அமைந்தது!

2013 டாப் 10 பிரச்னைகள் - மின்வெட்டு

இந்த ஆண்டு மட்டுமல்ல, எதிர்வரும் பல ஆண்டுகளுக்கு மின்வெட்டுதான் தமிழகத்தின் தலையாயப் பிரச்னையாக இருக்கும். வறுமைக்கோடு போலவே, மின்சாரப் பற்றாக்குறைக் கோடும் இனி நிரந்தரம்தான். இது எதிர்மறைப் பார்வை அல்ல... 
யதார்த்தமே இதுதான்.
 தமிழ்நாட்டின் மின் தேவை 12,000 மெகாவாட். இதில் மூன்றில் ஒரு பங்கான 4,000 மெகாவாட், இப்போது பற்றாக்குறை. ஆண்டின் மூன்றில் ஒரு பகுதிக் காலத்தில் பருவக்காற்று வீசுகிறது. அப்போது தமிழகம் மின் மிகை மாநிலம். ஆண்டில் மூன்றில் ஒரு பங்கான கோடையில் மின் பற்றாக்குறை. மூன்றில் ஒரு பங்கான மழை, பனிக்காலத்தில் மின் பற்றாக்குறை.

Thursday, January 2, 2014

2013 டாப் 10 பிரச்னைகள் - தண்ணீர்... தண்ணீர்...


2013-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி
பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...
"2013 -ம் ஆண்டின் தொடக்கத்தில் பசுமைத் தீர்ப்பாயத்தின் நடவடிக்கையைத் தொடர்ந்து, சென்னையில் விதிமுறைகளைப் பின்பற்றாத சுமார் 103 குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் அரசால் அதிரடியாக இழுத்து மூடப்பட்டன. உடனே சென்னைவாசிகள் குடிநீர்ப் பற்றாக்குறையில் தவித்தார்கள். 

2013 டாப் 10 பிரச்னைகள் - யானைகள்


 ''மலை இறங்குவதும், ஏறுவதும் யானைகளின் அடிப்படை குணம். அவை ஒரே இடத்தில் நிலையாக வாழக்கூடியவை அல்ல. மனிதர்களில் நாடோடிகள் போல, யானைகள் காடோடிகள்! ஆனால், 'ஊருக்குள் புகுந்து மிரட்டும் யானைகள்’ என்றும், 'யானைகள் அட்டகாசம்’ என்றும் தொடர்ந்து யானைகளை மனிதர்களின் எதிரிகளாகச் சித்திரித்துக் கொண்டிருக்கிறோம்.

2013 டாப் 10 பிரச்னைகள் - சூறையாடப்படும் இயற்கை வளங்கள்


''தென் தமிழகக் கடலோரத்தில் மணல் வளத்தை வாரிக் குவிக்கும் தாதுமணல் நிறுவனங்கள் கழிவு நீராக வெளியேற்றும் ரசாயனக் கழிவால், கடல் நீர் ரத்தச் சிவப்பாக மாறிவிட்டது. பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு ஆதாரமான கடல் ஆமைகள், நண்டுகள், சிங்க இறால், கடல் பூச்சிகள் போன்றவை அதிவேகமாக அழிந்துவருகின்றன. சதுப்புநிலக் காடுகள், சவுக்கு, பனை, தென்னை மரங்கள் நாசமாக்கப்பட்டுள்ளன. மீனவர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு, புற்றுநோய், கர்ப்பப்பை சிதைவு, கல்லடைப்பு, தோல் நோய், மூளை வளர்ச்சி குன்றல் போன்ற கொடிய நோய்கள் பீடிக்கப்பட்டு, கடற்கரைகளில் சுதந்திரமாக நடமாடக்கூட முடியாமல் அகதிகளைப் போல வாழ்கிறார்கள் மக்கள்.

Wednesday, January 1, 2014

Tuesday, December 31, 2013

அழகு சிந்தும் பசுமை !!

2013 ஆண்டின் இறுதிப் பதிவாக அழகு சிந்தும் பசுமை !!

ஆண்மையை அதிகரிக்கச் செய்யும் "தண்ணீர் விட்டான்" கிழங்கு

சித்தர்கள் காலத்திலிருந்து இன்றைய நவீன காலம் வரை ஆண்மையை அதிகரிக்கச் செய்யும் மருந்துகளின் வசீகரம் குறைந்தபாடு இல்லை. 

அது போலவே அனைத்து நோய்களையும் போக்கும் சர்வரோக நிவாரணிகளை கண்டு பிடிப்பதில் தான் சித்தர்கள் தங்கள் வாழ்நாளின் பெரும் பகுதிகளை பயன்படுத்தினர்.

ஆண்மையை அதிகரிக்கச்செய்வதோடு சர்வரோக நிவாரணியாக அனைத்து நோய்களையும் தீர்க்கும் "தண்ணீர் விட்டான்" கிழங்கின் மகத்துவம் நம்முடைய சித்தர்கள் மட்டுமல்ல வடநாட்டு ஞானிகளும் அறிந்துள்ளனர்.

2013ல் தமிழகம்..


2013ல் தமிழகம்... ஜெயேந்திரர் விடுதலை, திமுக- காங். உறவு முறிவு, அம்மா உணவகம் மற்றும் மின்வெட்டு!

சென்னை: காஞ்சி சங்கராச்சாரியார்களுக்கு சங்கரராமன் கொலையிலிருந்து கிடைத்த விடுதலை, இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாடு, அம்மா உணவகம் முதல் குடிநீர் வரையிலான தமிழக அரசின் அதிரடித் திட்டங்கள்.. மறக்க முடியாத மின்வெட்டு .. 2013ம் ஆண்டில் தமிழகத்தைக் கலக்கிய முக்கிய நிகழ்வுகளில் சில இவை. தமிழகம் முழுவதும் வரலாறு காணாத அளவில் அதிமுக முதல் திமுக வரை அத்தனைக் கட்சிகளும் ஒரே குரலில் மத்திய அரசை நிர்ப்பந்தித்த காரணத்தால், இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவிலிருந்து பின்வாங்கினார் பிரதமர் மன்மோகன் சிங். அதேபோல பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட அத்தனை பேரையும் விடுவித்து புதுச்சேரி நீதிமன்றம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

2013 இல் உலகில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்




2013 இல் உலகில் அதிகம் பேசப்பட்ட, அதிகம் உங்களிடையே ஆச்சரியத்தையோ, அதிர்ச்சியையோ, மகிழ்ச்சியையோ ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்த தொகுப்பு இது.
உங்களது, ஊர் அல்லது உங்களது மாநிலம் என்ற வகையில் இல்லாது மேற்குலகம் சார்ந்த அல்லது உலக நாடுகள் சார்ந்த சில முக்கிய சம்பவங்களின் தொகுப்பே இவை.

குறித்த சம்பவங்கள் நிகழ்ந்த போது அன்றைய தினங்களில் 4தமிழ்மீடியாவில் வெளிவந்த பதிவுகளையும் உங்களுக்கு தருகிறோம். 

குடிநீர் தரும் விளம்பரப் பலகை


இந்த விளம்பரப் பலகையில் பொருத்தப்பட்டுள்ள ஒரு ”உறிஞ்சி வடிகட்டி”, காற்றின் ஈரப்பதனில் உள்ள நீரை உறிஞ்சி எடுத்து சுத்தமான குடிநீராக கொடுக்கிறது.

பீகாரில் பொழியும் ‘தங்க மழை’


பீகாரில் உள்ள ரோட்டாஸ் மாவட்டத்தில் உள்ள சென்டுவர் கிராம விவசாயிகள் இம்முறை பெய்த மழையால் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் இம்மழையில் தங்கமும் கொட்டுகிறது.

கீழக்கரை தொதல்


இலங்கை இஸ்லாமியர்களின் சமையலில் இடம்பெறும் இனிப்பு வகை உணவுகளில் தொதல் மிகவும் முக்கியமான உணவு. இது பச்சரிசி, தேங்காய், சீனி, முந்திரி, ஏலக்காய் உட்பட்ட பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இப்பலகாரம் சர்க்கரைக் கழி என்று அழைக்கப்படுகிறது.

Monday, December 30, 2013

உற்சாக வருமானம் தரும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்!

எமது 1000ம் வது பதிவு இங்கே!!
நெல், தென்னை, ஆடு, கோழி, புறா, முயல், வாத்து... 8 ஏக்கர்... 13 லட்சம்...
உற்சாக வருமானம் தரும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்!
புல், பூண்டு, செடிகள், கொடிகள், மரங்கள், புழுக்கள், பூச்சிகள், விலங்குகள்... எனப் பல்லுயிர்கள் அடங்கியதுதான் கானகம். இவையெல்லாம் இல்லாமல், வெறும் மரங்கள் மட்டுமே இருந்தால்... அது கானகமாக இருக்க முடியாது. அதேபோலத்தான் விவசாயமும்... ஒரே பயிர் வெள்ளாமை மட்டுமல்ல விவசாயம். பலவிதமானப் பயிர்கள் கால்நடைகள், மீன்கள்... என அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒன்றின் கழிவை மற்றொன்றுக்கு உணவாகக் கொடுத்து, குறைந்த செலவில் அதிக லாபம் பார்ப்பதுதான் நமது பாரம்பரிய விவசாயம். இத்தகைய 'ஒருங்கிணைந்தப் பண்ணையம்’தான்... விவசாயிகளை என்றென்றைக்கும் வாழவைக்கும்''

வசீகரிக்கும் வால்பாறை

வால்பாறையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மேடு பள்ளங்களாக அந்த மலைப்பகுதியில் எங்கு நோக்கினும் பச்சை பசேலென்று கம்பளி போர்த்தப்பட்டது போல தேயிலைத் தோட்டங்கள்.

அழகிய இந்திய மலைப்பாதை ரயில்கள்!


இந்தியாவில் மலை ரயில் பாதைகள் அமைக்கப்பட்டதில் மிகப்பெரிய அரசியல் பின்னணி உள்ளது. அதாவது இந்தியாவின் மலைப்பகுதிகளில் தங்களின் காலனியாதிக்கத்தை நிறுவுவதற்காகவும், அதன் மூலம் அவ்விடங்களில் இராணுவ தளத்தை அமைக்கவும் திட்டமிட்ட ஆங்கிலேயர்கள் மலைப்பாதைகள் அமைக்க முடிவெடுத்தார்கள்.

குற்றாலத்திலே குளிச்சது போல இருக்குதா...

இயற்கை எழில் கொஞ்சும் குற்றாலம்…!

தமிழ்நாட்டில் பார்த்திராத பல இடங்கள் பல இருக்கின்றன. திரும்ப திரும்ப சென்ற இடங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், ஆண்டு தோறும் போய்வரும் ஒரு இடம் குற்றாலம்.
எப்பொழுது சீசன் களை கட்டுகிறதோ அப்பொழுது நண்பர்களுடன் குற்றாலத்திற்கு பஸ் ஏறிவிடுவதுண்டு!

செவ்வாய் கிரகத்தில் நீரோட்ட ஆதாரம்?

கடல் நீரை விடவும் அதிக உப்பு உள்ள நீரோட்டம்- செவ்வாய் கிரகத்தில் நீரோட்ட ஆதாரம்?

அண்டார்டிகாவில் உள்ள, மெக்மர்டோ வறண்ட பள்ளத்தாக்கில் உள்ளது டான் ஜுவான் நீர்நிலை.சாக்கடலைக் காட்டிலும் இந்த நீரில் உப்பு அதிகம் உள்ளது, உலகிலேயே அதிக உப்புத் தன்மை உள்ள நீராதாரம் இதுவே, இதனால்தான் துருவப்பகுதியில் இருந்தும் இந்த நீர் உறையாமல் உள்ளது. இந்த நீர் ஆதாரத்தின் தன்மைகளை ஆய்வு செய்கையில் செவ்வாய் கிரகத்தில் கடந்த காலத்தில் நீர் இருந்ததற்கான ஆதாரங்கள் சூட்சுமமாக தெரியவருகிறது என்று அமெரிக்க நிலவியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கர்ப்ப‌‌ப்பை கட்டிகள் - பய‌ம் வே‌ண்டா‌ம்!

கட்டி வளர்தல் என்றாலே நாம் உடனடியாக நினைப்பது அது புற்று நோயோ (Cancer)என்று தான் எந்த ஒரு சந்தேகமான கட்டிகளையும் சோதித்து அவை புற்று நோயல்ல என்று உறுதிப்படுத்திக் கொள்வது கட்டாயம். கர்ப்பப் பையில் வருகின்ற கட்டிகள் புற்றுநோய் கட்டியாக வளரலாம். 

பெண்களை அ‌திக‌ம் பாதிக்கும் வெரிகோஸ் வெயின்ஸ்!

வெரிகோஸ் வெயின்ஸ் என்பது நரம்பு சுருட்டி கொள்ளும் ஒரு வகை நோய். இது ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது. பெண்களுக்கு சுரக்கும் ஹார்மோன்கள் தான் இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. 30 வயதுக்கு மேல் 70 வயது வரை உள்ள பெண்களுக்கு இந்நோய் ஏற்படுகிறது. கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்சனை என்பது கால்களில் உள்ள நரம்புகள் புடைத்துக் கொள்வது. 

சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ்


கர்ப்பகாலம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும். இந்த காலத்தில் ஒரு பெண் தனது உடல் நிலையை பராமரிப்பதோடு மட்டுமல்லாமல் தனது வயிற்றில் வளரும் சிசுவையும் சேர்த்து பராமரிக்க வேண்டும்.

உலர்ந்த திராட்சையில் பெண்களுக்கு உள்ள பயன்கள்!


உலர்ந்த திராட்சையில் வைட்டமின் ‘பி’ மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.