Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, August 15, 2015

சாப்பாட்டிற்கு பிறகு பழம் சாப்பிடுவரா நீங்கள்? – ஓர் எச்சரிக்கை குறிப்பு.!


சாப்பாட்டிற்கு பின் பழம் சாப்பிடலாமா?
ஒரு விருந்து முடிந்ததும் , பிறகு பழம் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலபேரிடம் இருக்கிறது. இது சரியா? சாப்பிட்டப்பின் பழம் சாப்பிடுவது என்பது ஒரு சரியான செயல் அல்ல.
சாப்பிடும் முன்பே பழம் சாப்பிடவேண்டும். காரணம் ,
madulai
மாதுளை

Saturday, August 8, 2015

கொஞ்சம் அமுதம் கொஞ்சம் நஞ்சு : அதைக் குடிக்காதீங்க!


ஒரே ஒரு நாள் வெளியில் தண்ணீர் குடித்துவிட்டாலும்கூட, உடனே சிலருக்குச் சளி பிடித்து மூக்கு ஒழுக ஆரம்பித்துவிடும், தொண்டை கட்டிக்கொள்ளும், காய்ச்சலும்கூட எட்டிப்பார்க்கலாம். டாக்டரிடம் போனால், அவர் முதலில் கேட்கும் கேள்வி, “வெளியே தண்ணீர் குடித்தீர்களா?” என்பதுதான்.
பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை பாட்டில் குடிநீரை வாங்கிக் குடிப்பதைப் பரவலாகப் பார்க்க முடிந்ததில்லை. போகுமிடத்தில் கிடைத்த தண்ணீரைத்தான் எல்லோரும் குடித்துக்கொண்டிருந்தோம். எல்லா நேரமும் பெரிய நோய்கள் தொற்றிக்கொண்டிருக்கவில்லை. ஆனால், இன்றைய நிலைமை தலைகீழாக இருக்கிறது. என்ன நோய் தொற்றிவிடுமோ என்ற அச்சத்தில், பலரும் லிட்டருக்கு 15 ரூபாய் கொடுத்து பாட்டில் குடிநீரை நம்பிக் குடிக்கிறோம்.

சீனிமிட்டாய் என்ற வீதிமிட்டாய் என்ற சுத்துமிட்டாய்.





       


          திருநெல்வேலி மாவட்டத்திற்கு உரியசிறப்பு இனிப்பு பலகாரம் இதுவீதி மிட்டாய்,தேங்காய் எண்ணெய் மிட்டாய்சுத்து மிட்டாய்,சீனிமிட்டாய்என்றெல்லாம்இதைக்குறிப்பிடுவர்ஆரம்ப கட்டத்தில்திருவிழாக் காலங்களில் வீதிகளில்முளைக்கும் திடீர் மிட்டாய் கடைகளில்விற்பனை செய்யப்பட்டதால் இது வீதிமிட்டாசிஆனது.

தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள்

ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா!

இளநீரின் நன்மைகளைப் பற்றி

Friday, August 7, 2015

ஹஜ் செய்யவிருக்கும் ஹாஜிமார்களுக்கு டாக்டரின் அறிவுரை.!


 


ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை!
Dr.ஜெ.முஹ்யித்தீன்அப்துல் காதர் MBBS, MS




உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்காகத் தயாராகி வருகிறார்கள். பல்வேறு தயாரிப்புகள், பணம், உடை, உணவுப் பொருட்கள் எனப் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது. எப்படி தவாஃப் செய்ய வேண்டும், எவ்வாறு இஹ்ராம் உடை அணிவது, மினாவிலும் அரஃபாவிலும் எவ்வாறு நடந்துக் கொள்ளவேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால், மிக முக்கியமான ஒரு விஷயத்தை மட்டும் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் மறந்து விடுகின்றனர். அது, உடல்நலம்!

மது உள்ளே.. மதி வெளியே..

ளவுக்கு அதிகமாக மது அருந்தினால், அடுத்த நாள் காலை தாங்க முடியாத தலைசுற்றல் ஏற்படும் என்பது 'குடிமகன்கள்’ அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஆனால், தொடர்ந்து மது குடிப்பதால், உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் எந்த அளவுக்குப் பாதிப்பு அடைகின்றன என்பது குறித்து நீரிழிவு சிறப்பு மருத்துவர் டாக்டர் கருணாநிதி அளிக்கும் அதிர்ச்சிப் பட்டியல் இது...

Tuesday, August 4, 2015

வெள்ளந்தி மனுஷன் விஜயகாந்த்


விஜயகாந்த்  குறித்து இண்டர்நெட், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் என்று எல்லாவற்றிலும், ரவுண்டுகட்டி ரவுஸ் பண்ணுவது தொடர்கதை யான சமாச்சாரம். குறிப்பாக 24 மணிநேர குடிமகனாக அவரை ஆளாளுக்கு தங்கள் பாணியில் வறுத்து எடுத்து வந்தார்கள். அவரது பாணியில் சொல்வதென்றால் 'ஏதோ பக்கத்தில் இருந்து ஊற்றிக் கொடுத்ததைப் போல"  அவரவர் கற்பனை கதைகளை கட்டிவிட்டனர். அப்படியே அவர் மதுப்பழக்கம் உடையவர் என்றாலும் அது ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயமாகிவிடு கிறது. அப்படி இருக்கை யி்ல் அவரை மட்டும் குறிவைத்து நடக்கும் இந்த தாக்குதல் எந்த வகையில் நியாயம். 

Tuesday, July 28, 2015

கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்!

'Funny guy! Are you doing well? ' - அப்துல் கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்!

"நாங்கள் இருவரும் பேசி 8 மணிநேரங்களுக்கு மேல் ஆகிறது. தூக்கம் வரவில்லை. அவருடனான நினைவுகள் கண்ணீராய் வருகிறது. ஜூலை 27. மதியம் 12 மணிக்கு கவுகாத்தி விமானத்தில் அமர்ந்தோம். அவர் 1A இருக்கையில் அமர, நான் 1C இருக்கையில் அமர்ந்திருந்தேன். அவர் கருப்பு வண்ண ‘கலாம் சூட்’-ஐ அணிந்திருந்தார். ‘அருமையான கலர்!’ என்றேன். 
 
2.5 மணிநேரப் பயணம். எனக்கு டர்புலென்ஸ் ஆகாது. ஆனால், கலாமுக்கு அது ஒரு பிரச்னையே இல்லை. ஒவ்வொரு முறை டர்புலென்ஸ் காரணமாக விமானம் ஆட்டம் காணும்போது, நான் பயத்தில் அமர்ந்திருக்க, ஜன்னலை மூடிவிட்டு, 'இப்போது பயம்  போயிருக்குமே! என்பார்.  

Monday, July 27, 2015

சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்!!

தமிழர்களுடைய முக்கிய பண்புகளில் விருந்தோம்பலுக்கு எப்போதும் தனி இடம் உண்டு .அதுவும் உணவு உபசரிப்பின் போது, உட்கொள்ளும் உணவை வாழை இலையில்  உட்கொண்டால் தான், நம்மில் பலருக்கு "விருந்து" சாப்பிட்ட உணர்வு , தித்திப்பாக தொண்டையில் நிற்கும் .வாழை இலை எளிதில் மட்கும் பொருள் என்பதால் ,இது சுற்றுச்சூழலையும் எளிதில் மாசுபடுத்தாது .

Sunday, July 26, 2015

இறால் மலாய் குழம்பு


என்னென்ன தேவை?

இறால் - 1 கிலோ (சுத்தம் செய்தது),
வெங்காயம் - 1 + 1 (நறுக்கியது மற்றும் பேஸ்ட் செய்தது),
பூண்டு - 8 (பேஸ்ட் செய்தது),
பச்சை மிளகாய் - 2 + 6 (நீளமாக கீறியது மற்றும் பேஸ்ட் செய்தது),
தேங்காய் பால் - 1 கப்,
கடுகு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.
எப்படிச் செய்வது?

Thursday, July 23, 2015

வெண்டைக்காய் மோர் குழம்பு


வெண்டைக்காய் மோர் குழம்பு





தேவையான பொருட்கள்: 
புளித்த தயிர் - 1 கப் 
வெண்டைக்காய் - 4-5 (நறுக்கியது) 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1 டீஸ்பூன்

`வடக்கு சென்டினல் தீவு' உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம்


`வடக்கு சென்டினல் தீவு' உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம்


வடக்கு சென்டினல் தீவு: உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம் இந்த பூமியில் உண்டா என்று கேட்பவர்களுக்கு இந்தத் தீவுதான் சரியான பதில். உலக நாகரீகத்தின் ஒரு துளி கூட இந்தத் தீவை அண்ட முடியவில்லை. இந்த தீவுக்குள் சர்வதேச சமுதாயத்தின் மூச்சுக் காற்று கூட புக முடியாத அளவுக்கு இரும்புக் கோட்டையாக இருக்கிறது இந்தத் தீவு. அதுதான் வடக்கு சென்டினல் தீவு. 

இந்தத் தீவுக்குள் யாரேனும் நுழைய முயன்றால் ஒன்று உயிர் பிழைக்க தப்பி ஓட வேண்டும் அல்லது உயிரை விட வேண்டும். வெளி உலகின் தொடர்பு சுத்தமாக இல்லாமல் இந்த வித்தியாசமான தீவு இந்த உலகத்தில் இருந்து வருகிறது. 

இயற்கை எழில் குறையாத மாஞ்சோலை


திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம், பாபநாசம், காரையாறு, களக்காடு மற்றும் பாண தீர்த்தம் போன்ற சிறு அருவிகள், அணைக்கட்டுகள், பறவைகள் சரணாலயங்கள் என எத்தனையோ இயற்கை சூழ்ந்த இடங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன. இவற்றிற்கெல்லாம் மகுடமாகத் திகழ்வது மாஞ்சோலை.

Wednesday, July 22, 2015

பழச்சாறு தயாரிப்பு! சர்வசாதாரணமாக 30% லாபத்தை அள்ளலாம்!


வாரம் ஒரு தொழில்! - பழச்சாறு தயாரிப்பு!


ஆண்டுக்கு எட்டு மாதம் வெயில் சுட்டெரிக்கும் நம்மூரில் சில்லென்று கிடைக்கும் குளிர்பானங்களுக்கு இருக்கும் மவுசே தனிதான். அதிலும் பழங்களைக் கொண்டு தயார் செய்யப்படும் பழச்சாறு தயாரிப்பு பிஸினஸ்தான் இப்போதைக்கு செம ஹிட்!

Tuesday, July 21, 2015

எம்டன் வந்தான்... எம்.ஜி.ஆர். வந்தார்!

எம்டன் வந்தான்... எம்.ஜி.ஆர். வந்தார்! (மெட்ராஸ் நல்ல மெட்ராஸ

(மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்-21)

சென்னையில்,  "அவனா எம்டனாச்சே... !" என்ற சொல் வழக்கு கொஞ்ச காலம் முன்னாடிவரை சகஜமாக இருந்தது. எம்டன் என்பதை சிலர் எமன் என்ற அர்த்தத்தில் சொல்வர். சற்றே சரித்திரம் தெரிந்தவர்களுக்கு எம்டன் என்பது ஒரு கப்பலின் பெயர் என்பது தெரிந்திருக்கும்.
1914ஆம் ஆண்டு முதல் உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோது, இங்கிலாந்து நாட்டினருக்கு எதிராக இருந்த ஜெர்மானியர்கள்,  இங்கிலாந்தை தாக்குவதற்கு படை திரட்டி வந்தனர். இந்தியாவும் அப்போது இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால், இந்தியாவும் ஜெர்மானியர்களுக்கு எதிராகப் பார்க்கப்பட்டது.

உங்க வீட்டுல ஃப்ரிட்ஜ் இருக்கா?


''வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஏ.சி. வைத்திருப்பவர்கள் எந்த அளவுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கடந்த இதழில் நன்றாகவே உஷார் படுத்திவிட்டீர்கள்'' - இப்படி 'அவள்' வாசகிகள் ஏகப்பட்ட பேரின் பாராட்டு மழையில் நனைந்துகொண்டே இருக்கிறோம்.கூடவே, ''இதேபோல் வீட்டில் உபயோகிக்கப்படும் பல்வேறு பொருட்களின் பாதுகாப்பு மற்றும் பயன் பாட்டு முறைகளை பற்றியும் தொடர்ந்து எழுதுங்கள். இதனால், பல லட்சம் பேர் பலனடைவார்களே?!'' என்று உரிமையோடு வேண்டுகோள் கள் வேறு.
வாசகிகளின் ஆசையை உடனடியாக நிறைவேற்றுவது தானே 'அவள்' கடமை.
ஏ.சி-க்கு அடுத்தபடியாக ஃப்ரிட்ஜிலிருந்தே இதோ, கச்சேரி ஆ...ர...ம்...ப...ம்...

Sunday, July 19, 2015

தண்ணீர் பற்றாக்குறையில் தவிக்கும் சென்னை!

காலிக்குடங்கள்... காத்திருப்பு... தண்ணீர் பற்றாக்குறையில் தவிக்கும் சென்னை!

மெட்ரோ சென்னையில் தண்ணீர் பற்றாக் குறை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆங்காங்கே மக்கள் காலிக் குடங்களுடன் சாலைகளில் பயணிப்பதும் காத்திருப்பதும், நெடுநேரமாகி வரும் தண்ணீர் லாரிகளை மொய்ப்பதும் அன்றாட அவலமாகியிருக்கிறது .
அதிலும் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, தரமணி, காசிமேடு, குரோம்பேட்டை   உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகத்தால் வயிற்றுப் போக்கு பாதிப்பால் பொதுமக்கள் அவதியுறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள கொடுமையும்  நிகழ்ந்து வருகிறது.

'வத்தல் தாத்தா

ரூ.300 முதலீட்டில் ரூ.30 லட்சம் வருமானம்: அசத்தும் 'வத்தல் தாத்தா'!

'வத்தல் தாத்தா' யாரென கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும் அளவுக்கு மதுரை, செல்லூர் வட்டாரத்தில் டி.பி.ராஜேந்திரன் மிகவும் பிரபலம். காரணம், இவரது திருப்பதி விலாஸ் வத்தல் கம்பெனி.
78 வயதான ராஜேந்திரன் இந்த வயதிலும், இளைஞர்களைப் போன்று சுறுசுறுப்பாக உழைத்து வருகிறார். தினமும் காலை 4 மணிக்கு காய்கறி சந்தைகளில் ஆரம்பமாகும் இவரது வேலைகள், இரவு கம்பெனி வரையிலும் தொடர்கிறது. வத்தல் போடுவதற்கான சுண்டைக்காய் வாங்குவதற்காக, ஆந்திரா, பென்னாகரம், சத்தியமங்கலம், மிதுக்கங்காய்க்கு விளாத்திகுளம், மாங்காய்க்கு பெரியகுளம், மற்ற காய்கறிகளுக்கு மாட்டுத்தாவணி, பரவை என பம்பரமாய் சுற்றுகிறார்.

Tuesday, July 7, 2015

கடலை மிட்டாய் எப்படி தயாரிக்கிறாங்க?



"அ
ண்ணா... ஒரு பைவ் ஸ்டார் கொடுங்க, இங்க ஒரு சாக்லேட், 5 ரூபாய்க்கு டெய்ரி மில்க் கொடுங்க, இங்க ஒரு சுவிங்கம் கொடுங்க” என கடைகளில் லேட்டஸ்ட்  சாக்லேட்  வகையறாக்களை வாங்கிக் கொண்டிருந்த

Saturday, June 27, 2015

மைசூர் போண்டா


மைசூர் போண்டா
தேவையானவை: உளுத்தம்பருப்பு - 1 கப், பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி - 1 துண்டு, பச்சை மிளகாய் - 2, மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 10, பெருங்காயம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவைக்கு.

மீன்கள் ஜாக்கிரதை!

உரம் போட்டு, ஊசிகள் போட்டு, கழிவுகள் கொட்டி..

'மீன் குழம்பு’ என்று வாசித்தாலே நாக்கில் எச்சில் ஊறும் நம்மவர்களுக்கு! ஆட்டுக்கறி, கோழிக்கறியைக் காட்டிலும் அசைவ உணவு வகைகளில் மீனுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. அசைவ உணவு வகைகளில் சத்து மிகுந்ததும் மீன்தான். எல்லாவற்றையும் நச்சுப்படுத்தி லாபம் பார்க்கும் நவீனகால வியாபார உலகம், மீன்களை மட்டும் விட்டுவைக்குமா? இன்று நாம் உண்ணும் மீன்கள் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை? அவை எத்தகைய சூழலில், எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன? ஞாயிற்றுக்கிழமை மதியங்களை சுவைமிக்கதாக மாற்றும் மீன் வாசனையின் இன்னொரு பக்கத்தை இங்கே அலசலாம்.

Monday, June 8, 2015

சூரை மீன் தந்தூரி(Tuna Fish Tandoori


 
 
தேவையான  பொருட்கள்:
      வெள்ளை சூரை மீன்        -     பெரியதாக நான்கு
    * மிளகாய்தூள்                -      இரண்டுகரண்டி
    * மஞ்சள்தூள்                 -      ஒருகரண்டி
 அரைக்க
    * பச்சைமிளகாய்              -      50கிராம்

Tuesday, June 2, 2015


புற்றுநோய்க்கு புதிய மருந்து; 60 சதவீதம் பேருக்கு குணம் தெரிந்தது

PRINT   ·   T+  
புற்றுநோய்க்கு புதிய மருந்து நம்பிக்கையளிப்பதாக கூறப்படுகிறது
bbcபுற்றுநோய்க்கு புதிய மருந்து நம்பிக்கையளிப்பதாக கூறப்படுகிறது

புற்றுநோயை குணப்படுத்த கொடுக்கப்படும் இரண்டு வெவ்வேறு மருந்துகளை ஒன்றாக சேர்த்துக் கொடுத்தபோது, மெலனோமா எனப்படும் தோல்புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானோரின் புற்றுநோய்க் கட்டிகள் சுருங்கிவிட்டதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது

வருகிறது சூரிய சக்தி ரயில்: இந்தியன் ரயில்வே அறிமுகம்!


புதுடெல்லி: சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் சூரிய சக்தியில் இயங்கும் ரயிலை இந்தியன் ரயில்வே அறிமுகம் செய்ய உள்ளது.இதற்கான சோதனை ஓட்டம் நடத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.  

முன்மாதிரியாக சூரிய சக்தியை கொண்டு ரயிலை இயக்க சோதனையில் முதலில் ரயில் பெட்டிகளில் சோலார் தகடுகள் பொறுத்தப்பட்டு உள்ளன. மிகவிரைவில் அனைத்து மொத்த ரயில்களிலும் சோலார் தகடுகள் பொறுத்தப்படும் என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சூரிய மின்சக்தியானது, ரயில்வேயில் டீசல் பயன்பாட்டை குறைக்கும், செலவினங்களை குறைக்கும் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர். ரயில்களில் பொறுத்தப்பட்டு உள்ள சோலார் தகடுகள் மூலம் தற்போது 17 யுனிட்ஸ் மின்சாரம் பெறமுடிகிறது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Sunday, May 31, 2015

கொங்கு நாட்டு கோழிச் சாறு


நாட்டு கோழி - 1/2 கிலோ 
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ 
சீரகம் - 2 ஸ்பூன் 
மல்லி - 4 ஸ்பூன் 
சோம்பு - கால் ஸ்பூன் 
வர மிளகாய் - 4 
பூண்டு - 2 பல்லு 
தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்