இதுவும் கடந்து போகுமோ?
சிவகாசி என்றால், கந்தக பூமி என்று சொல்லிவிட்டு எளிமையாக நாம் கடந்துவிடுகிறோம். இந்தியாவின் 90 சதவிகித வெடிபொருட்கள் சிவகாசியில்தான் தயாரிக்கப்படுகின்றன; 80 சதவிகித தீப்பெட்டி உற்பத்தி சிவகாசியில்தான் நடக்கிறது; தவிர, 60 சதவிகித அச்சுப் பணிகள் இங்கே நடக்கின்றன.
எத்தனை ஆலைகள் கடவுளுக்குத்தான் வெளிச்சம்!
மாவட்ட நிர்வாகம், வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை, தீயணைப்புத் துறை,
காவல் துறை, தொழிலாளர் நலத் துறை, கலால் துறை, வணிக வரித் துறை, உள்ளாட்சி
அமைப்புகள்... இப்படிப் பல துறைகளின் ஆசி இருந்தால்தான் ஒரு பட்டாசு ஆலையை
இயக்க முடியும். அரசுக் கணக்குபடி சிவகாசியில் உள்ள ஆலைகளின் எண்ணிக்கை
791. ஆனால், இந்தக் கணக்கை உள்ளூரில் உள்ள சின்ன குழந்தைகூட நம்பாது.
சிவகாசியைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் ஒவ்வொரு வீடுமே ஓர் ஆலைதான்.
எப்படி? லஞ்சம்... லஞ்சம்... லஞ்சம்!
'விதி’யும் விதியும்!
பட்டாசுத் தயாரிப்பு விதிகளில் நிறைய கூடாதுகள் உண்டு. முக்கியமாக
அபாயகரமான செந்தூரம் மருந்தைப் பயன்படுத்தக் கூடாது. ஆனால், வெறும்
காகிதத்திலும் அதிகாரிகள் லஞ்சம் கேட்டு மிரட்டவுமே இந்த விதிகள்
பயன்படுகின்றன. விதிகள் எந்த அளவுக்கு இங்கு பின்பற்றப்படுகின்றன என்பதற்கு
உதாரணம்... சமீபத்தில் விபத்து நடந்த முதலிப்பட்டி ஆலையில் மட்டும் 40
விதிமீறல்கள் நடந்ததாகக் கூறினார் வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர். கடந்த
ஆண்டு சாத்தூரில் ஒரு பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு, 5 பேர்
உயிரிழந்தனர். ஆனால், அடுத்த மூன்று மாதங்களுக்குள் மீண்டும் உரிமம் பெற்று
உற்பத்தியைத் தொடங்கி மறுபடியும் இன்னொரு விபத்தைச் சந்தித்தது அந்த ஆலை.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 178 பட்டாசு ஆலைகள் வெடி விபத்துகள் மூலம்,
240 பேர் உயிர் இழந்திருக்கின்றனர்; 171 பேர் பலத்த காயம்
அடைந்திருக்கின்றனர்.
பேருதான் பெத்த பேரு!
இவ்வளவு பெரிய தொழில் நகரத்தில், மிக அபாயகரமான வேலையில் இருக்கும் தொழிலா
ளர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குவார்கள் என்று நினைக்கிறீர்கள்?பெரிய பட்டாசு ஆலைகளில் ஒரு நாளைக்கு ஆண் தொழிலாளர்களுக்கு
உயிர் கொல்லும் ரசாயனம்!
சிவகாசி வெடிகளின் மூலாதார மாக இரு மூலப் பொருட்களைக் குறிப்பிடலாம். கரி
மருந்து, மணி மருந்து. நாள் முழுவதும் ரசாயனங்களோடு புழங்குவதால், கொஞ்சம்
கொஞ்சமாக ரசாயனம் தொழிலா ளர்கள் உடலுக்குள் செல்வது சாபக்கேடு.
''தொடக்கத்தில் உடல் சூடு, கண், தோல், வயிறு சம்பந்தமான நோய்கள், காச நோய்
என்று ஆரம்பிக்கும் உடல்நலக் குறைபாடுகள், கடைசியில் புற்றுநோய் வரை
கொண்டுபோய்விடக் கூடியவை இந்த ரசாயனங்கள்!'' என்கிறார் மருத்துவர்
புகழேந்தி. ''இப்படி மோசமான சூழலில், ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச்
செய்பவர்களிடம் முதலில் அலுப்பும் களைப்பும் உண்டாகும். பின்னர்
இப்படித்தான் கழியுமா என் வாழ்க்கை என்ற கேள்வி அவர்களை விரக்தியை நோக்கித்
தள்ளும். ஆனால், குடும்பச் சூழல் தொழிலைவிட்டு அவர்களை வெளியேறவிடாது.
விளைவு அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மனநோயாளி ஆவார்கள்'' என்கிறார் மனநல
மருத்துவர் சீதா. இவ்வளவு மோசமான பணிச் சூழலை எதிர்கொள்ளும் தொழிலா
ளர்களிடம் ஆலை முதலாளிகள் காட்டும் கரிசனம் என்ன தெரியுமா? வாழைப் பழம்!
''அதுவும்கூட பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குத்தான்
கிடைக்கும்'' என்கிறார்கள் தொழிலாளர்கள். பெரும்பாலான பட்டாசு ஆலைகளில்
தொழிலாளர்களுக்கு வருகைப் பதிவேடுகூடக் கிடையாது. ஒப்பந்த முறைத் தொழிலா
ளர்கள் என்பதால், இவர்களுக்குத் தொழிலாளர் ஈட்டுறுதிக் காப்பீடு, வருங்கால
வைப்பு நிதி இப்படி எந்தப் பணிப் பாதுகாப்பும் கிடையாது.
கொழிக்கும் கறுப்புப் பணம்!
கண்காணிப்பின்மையால் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. ''பட்டாசு
நிறுவனங்களின் வரி ஏய்ப்பு பல நூறு கோடிகளைத் தாண்டும். ஒரு ஆயிரம்வாலா
பட்டாசின் விலை
அரசாங்கம் செய்தது என்ன?
''பெரிய தொழில் நகரம் என்று பெயருக்குத்தான் சொல்ல வேண்டும். எங்கள் ஊரில் நல்ல சாலைகள் கூடக் கிடையாது தெரியுமா? வெம்பகோட்டை, ஆமத்தூர், தளிச்சேரி, மல்லி ஆகிய இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் வேண்டும். நல்ல தீ சிகிச்சை மருத்துவமனை வேண்டும். தொழிலாளர் மருத்துவமனையை மருத்துவக் கல்லூரியாக்க வேண்டும். இப்படி எவ்வளவோ கோரிக்கைகள். அட, வெப்பநிலை திடீரென உயர்ந்து எத்தனையோ முறை விபத்துகளைச் சந்தித்து இருக்கிறோம். ஒரு சமுதாய வானொலி நிலையம் அமையுங்கள்; வெப்பநிலை உயரும்போது அறிவிப்பு கொடுங்கள் என்று கேட்கிறோம். அரசு என்ன செய்து இருக்கிறது?'' என்கிறார் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர் சங்க முன்னாள் தலைவர் ஏ.பி.செல்வ ராஜன்.
விருதுநகர் முன்னாள் மாவட்ட ஆட்சியர் பாலாஜி, அரசுக்கு ஓர் அறிக்கை அனுப்பினார். கூடுதல் தீயணைப்பு நிலையங்கள், ஆம்புலன்ஸ் வேன்கள் போன்ற அத்தியாவசியத் தேவைகளில் தொடங்கி ஆலைகள் கண்காணிப்பு வரை தேவைகளைச் சுட்டிக்காட்டியது அந்த அறிக்கை. முக்கியமாக, ''சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர தீக்காயச் சிறப்புப் பிரிவுபோல்,
''வெளிநாடுகளிலும் பட்டாசு ஆலைகள் இருக்கின்றன. ஆனால், அங்கெல்லாம் இப்படி நடப்பது இல்லையே... ஏன்? அங்கு விபத்துகள் நேரிட்டால், தடுப்ப தற்குத் தானியங்கி இயந்திரங்கள் ஆலைகளில் பொருத்தப்பட்டு உள்ளன. அறையின் வெப்ப நிலை ஏறினாலே தண்ணீரைப் பொழியும் ஷவர்கள் அறைக்கு அறை உண்டு. நாம் இன்னமும் கையுறை, முகமூடி போன்ற அடிப்படை வசதிகளுக்கே போராடிக்கிடக்கிறோம்; நவீன வசதிகளை எல்லாம் இங்கே எப்போது நினைத்துப்பார்ப்பது?'' என்கிறார் ஆவணப்பட இயக்குநரான பாரதி கிருஷ்ணகுமார்.
ஆமாம்... எப்போது நினைத்துப்பார்ப்பது?
Thanks to AnanthaVikatan-
No comments:
Post a Comment