1, 1837 – இந்தியாவில் அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது. 1, 1953 – ஆந்திர மாநிலம் உதயமானது. 2, 1963 – காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்து வதற்காக முதல்வர் பதவியிலிருந்து காமராஜர் விலகினார். 3, 1990 – கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி ஒன்றாக இணைந்தன. 4, 1957 – ரஷ்யாவின் ஸ்புட்னிக் செயற்கைக்கோள் முதன்முதலாக விண்ணில் செலுத்தப்பட்டது. 5, 1780 – வேலு நாச்சியார் தலைமையில் ஆங்கிலேயர் எதிர்ப்புப் போர் நடைபெற்றது. 5, 1886 – தென் ஆப்ரிக்காவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. 6, 1886 – தாமஸ் ஆல்வா எடிசன் உலகின் முதலாவது அசையும் சினிமாப் படத்தைக் காண்பித்தார். 7, 1950 – அன்னை தெரசா தனது தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். 8, 1932 – இந்திய விமானப் படை நிறுவப்பட்டது. 11, 1968 – அமெரிக்காவின் அப்பல்லோ-7 விண்கலம் 3 வீரர்களுடன் விண்வெளிக்குச் சென்றது. 2, 2010 – ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரம் இல்லாத உறுப்பு நாடாக 19 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா தேர்வு பெற்றது. 13, 1792 – அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு (குடியரசுத் தலைவர் வசிப்பிடம்) அடிக்கல் நாட்டப்பட்டது. 13, 1946 – இந்தியாவில் இடைக்கால அரசு நேரு தலைமையில் அமைந்தது. 15, 1932 – ஏர் இந்தியா நிறுவனம் தனது விமான சேவையைத் துவக்கியது. 17, 1977 – அன்னை தெரசா அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். 19, 1943 – காச நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 21, 2012 – டென்மார்க்கில் நடந்த பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார். 22, 2008 – இந்தியாவின் சந்திரயான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. 22, 2010 – மத்திய அரசு, யானைகளுக்கு தேசிய பாரம்பரிய விலங்கு என்ற அந்தஸ்தைக் கொடுத்தது.
24, 1712 – தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில் முதன் முதலாக அச்சு இயந்திரம்
கொண்டு தமிழ், ஆங்கிலம், போர்ச்சுக்கீசிய மற்றும் லத்தீன் மொழிகளில்
நூல்கள் அச்சிடப்பட்டன. 24, 1844 – இங்கிலாந்தில் ரோச்டேல் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து “சமத்துவ முன்னோடிகள் கூட்டுறவு சங்கம்’ என்ற கூட்டுறவு அமைப்பை முதன்முதலில் ஏற்படுத்தினார். 25, 1917 – ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி ஏற்பட்டது. 28, 1886 – அமெரிக்காவில் நியூயார்க் நகரில் சுதந்திரதேவி சிலை திறந்து வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment